Breaking News

TNPSC - தமிழ் இலக்கணம் வினா விடைகள்

ADSENSE HERE!

தமிழ் மொழிஇயற்றமிழ்இசைத்தமிழ் மற்றும் நாடகத் தமிழ் எனமூன்று பிரிவுகளை உடையதுஇவையே முத்தமிழ் எனஅழைக்கப்படக் காரணமாக விளங்குகிறதுநம் முன்னோர்முத்தமிழின் பிரிவுகள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியேஇலக்கணம் அமைத்தனர்அகத்தியம் முத்தமிழுக்கும் உரியஇலக்கண நூல் என்பர்இருப்பினும்
பொதுவாக தமிழ்இலக்கணம் என்பது இயற்றமிழ் இலக்கணத்தைக்குறிப்பதாயிற்றுசெய்யுள் மற்றும் உரைநடை ஆகியவற்றின்தொகுதி இயற்றமிழாகும்தொல்காப்பியம் இயற்றமிழில்கிடைத்துள்ள மிகப்பழைய இலக்கண நூலாகும்பைந்தமிழ்இலக்கணம் ஐந்து வகைஅவை,
1.    எழுத்து
2.    சொல்
3.    பொருள்
4.    யாப்பு
5.    அணி
அறிஞர்கள் தமிழ் இலக்கணத்தை மூன்று இலக்கணம் என்றும்ஆறு இலக்கணம் என்றும் ஏழு இலக்கணம் என்றும்வகைப்படுத்துவர்.

பொருளடக்கம்

எழுத்து - முதலெழுத்து, சார்பெழுத்துகள்
எழுத்து குறித்த இலக்கணச் செய்தி
சொல்
பொருள்

யாப்பு

      5.1 யாப்பின் உறுப்புகள்
  5.2 யாப்பின் அடிப்படையில் பா வகைகள்
அணி
    எழுத்து

    முதலெழுத்து

    "எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப" -தொல்காப்பியம்
    உயிரும் உடம்புமாம் முப்பது முதலே - நன்னூல்

     முதல்  வரையுள்ள 12 உயிரெழுத்துகளும், 'க்முதல் 'ன்'வரையுள்ள 18 மெய்யெழுத்துகளும் ஆகிய முப்பதும்முதலெழுத்துகள் எனப்படும்
    • உயிரெழுத்துகள்: உயிரெழுத்துகள் 12 அவை ,
    • மெய்யெழுத்துகள்: மெய்யெழுத்துகள் 18 அவை க்ங்ச்ஞ்,ட்ண்த்ந்ப்ம்ய்ர்ல்வ்ழ்ள்ற்,ன்
    • ஆய்த எழுத்து : ஆய்த எழுத்து ஒன்று  
    உயிரெழுத்துக்கள் குறில்நெடில் என இருண்டு வகைப்படும்.மெய்யெழுத்துக்கள் வல்லினம்மெல்லினம்இடையினம் என்றுமூன்று வகைப்படும்.

    சார்பெழுத்துகள்

    உயிர்மெய் ஆய்தம் உயிரள பொற்றள
     ஃகிய இஉ ஐஔ மஃகான்
    தனிநிலை பத்தும் சார்பெழுத் தாகும்
                                           -நன்னூல்
    1.    உயிர்மெய் எழுத்து
    2.    ஆய்த எழுத்து
    3.    உயிரளபெடை
    4.    ஒற்றளபெடை
    5.    குற்றியலுகரம்
    6.    குற்றியலிகரம்
    7.    ஐகாரக் குறுக்கம்
    8.    ஔகாரக் குறுக்கம்
    9.    மகரக்குறுக்கம்
    10.  ஆய்தக்குறுக்கம்
    எனச் சார்பெழுத்து பத்து வகைப்படும்முதலெழுத்துகளைச்சார்ந்து வருவதாலும்முதலெழுத்து திரிபுவிகாரத்தால்பிறந்ததாலும் இவை சார்பெழுத்துகள் என அழைக்கப்படுகின்ற்ன
    இவ்வாறுஉயிர் எழுத்துகள் 12 , மெய் எழுத்துகள் 18 , உயிர்மெய்எழுத்துகள் (இவைகள் உயிர் மெய் இரண்டும் சார்ந்து வரல்ஆதலின் சார்பெழுத்து எனப்படும் 216) மற்றும் ஆய்தம் ஆகிய 247எழுத்துகளேதமிழ் எழுத்துகள் எனப்படும்.
    உயிர் எழுத்துக்கள்
    12
    மெய் எழுத்துக்கள்
    18
    உயிர்மெய் எழுத்துக்கள்
    216
    ஆய்த எழுத்து
    1
    தமிழ் எழுத்துக்கள் மொத்தம்
    247


    எழுத்து குறித்த இலக்கணச் செய்தி

    எழுத்தெண்ணிச் சீரும் அடியும் வரையறுக்கும் நிலையைத்தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.
    வஞ்சியுரிச்சீர்குறளடிசிந்தடிநேரடிநெடிலடிகழி நெடிலடிபோன்றவை எழுத்தடிப்படையில் எழுத்தெண்ணி சீர்களும்அடிகளுமாகும்.

    வஞ்சியுரிச்சீர்

    நேர் இறுதி ஐந்து எழுத்து நிரை இறுதி ஆறு எழுத்து சிறுமை மூன்றுஎழுத்து பெருமை ஆறு எழுத்து
    முதல் 6 எழுத்து வரை - குறளடி
    முதல் 9 எழுத்து வரை - சிந்தடி
    10 முதல் 14 எழுத்து வரை - நேரடி
    15 முதல் 17 எழுத்து வரை - நெடிலடி
    18 முதல் 20 எழுத்து வரை - கழி நெடிலடி
    மெய்யெழுத்து உயிரில் எழுத்து என்று குறிக்கப் பெறுகிறது.
    ஓரடிக்கு 4 முதல் 20 எழுத்து வரை ஆசிரியப்பா வருமென்றும், 7முதல் 16 எழுத்து வரை வெண்பா வருமென்றும், 13 முதல் 20எழுத்து வரை கலிப்பா வருமென்றும் தொல்காப்பியர் குறிக்கிறார்

    சொல்
    ஓர் எழுத்து தனித்து நின்றோ பல எழுத்துகள் தொடர்ந்து நின்றோபொருள் தருவது சொல் எனப்படும்.
    .கா: வீடுகண்போ,
    சொல்லின் வகைகள்
    1.    பெயர்ச்சொல்
    2.    வினைச்சொல்
    3.    இடைச்சொல்
    4.    உரிச்சொல்

    பொருள்
    பொருள் இரண்டு வகைப்படும்அவை,
    1.    அகப்பொருள்
    2.    புறப்பொருள்
    நம் இலக்கியஙளுக்குப் பாடுபொருள்களாக அமைவனஅகப்பொருள்களும் புறப்பொருள்களும்.ஒத்த அன்புடையதலைவனும் தலைவியும் ஒருவரையொருவர் காதலித்து நடத்தும்வாழ்க்கை நிகழ்ச்சிகளை விளக்கிக் கூறுவது அகப்பொருள்.அறம்,பொருள்வீடு ஆகிய (இன்பம் ஒழிந்தமூன்று பேறுகளைபற்றியும்கல்விவீரம்கொடைபுகழ் முதலியன பற்றியும்கூறுவது புறப்பொருள்.

    யாப்பு
    யாப்பு என்பதற்குப் புலவர்களால் செய்யப்பெறும் செய்யுள் என்பதுபொருள்செய்யுள் இயற்றுதற்குரிய இலக்கணம்யாப்பிலக்கணமாகும்.

    யாப்பின் உறுப்புகள்
    1.    எழுத்து
    2.    அசை
    3.    சீர்
    4.    தளை
    5.    அடி
    6.    தொடை
    உயிர் எழுத்துக்களும்உயிர்மெய்யெழுத்துக்களும் தத்தம் ஒலிஅளவுகளைப் பொருத்து குறில் அல்லது நெடில் எனவழங்கப்படுகின்றனகுற்றெழுத்து மற்றும் நெட்டெழுத்துக்களின்அடுக்குகளை அசைகளாக வகுத்துள்ளனர்நேரசை மற்றும்நிரையசை ஈரசைகளாவனகுறிலோ நெடிலோ தனித்தோஒற்றடுத்தோ வருதல் நேரசையாகும்இருகுறிலிணைந்துவருதலும்குறில் நெடிலிணைந்து வருதலும்இவை இரண்டும்ஒற்றடுத்து வருதலும் நிரையசையாகும்ஒலிப்பியல்அடிப்படையில் அசைகளே கவிதைகளின் அடிப்படைக்கூறுகளாவனஅசைகளின் கூட்டு சீர் எனப்படும்சீர்கள்ஒன்றன்பின் ஒன்றாக வருதலால் தளைகள் உண்டாகும்.

    யாப்பின் அடிப்படையில் பா வகைகள்
    1.    வெண்பா
    2.    ஆசிரியப்பா
    3.    கலிப்பா
    4.    வஞ்சிப்பா

    அணி
    அணி என்பதற்கு அழகு என்பது பொருள்செய்யுளில் அமைந்துகிடக்கும் சொல்லழகுபொருளழகு முதலியவற்றைவரையறுத்துக் கூறுவது அணி இலக்கணமாகும்அணிபலவகைப்படும்அவற்றுள் சில,

    1.    தன்மையணி
    2.    உவமையணி
    3.    உருவக அணி
    4.    பின்வருநிலையணி
    5.    தற்குறிப்பேற்ற அணி
    6.    வஞ்சப் புகழ்ச்சியணி
    7.    வேற்றுமை அணி
    8.    இல்பொருள் உவமையணி
    9.    எடுத்துக்காட்டு உவமையணி
    10.  இரட்டுறமொழிதலணி
    ADSENSE HERE!

    No comments:

    Post a Comment