ADSENSE HERE!
1) செய்வினை வாக்கியத்தைக் கண்டறிக.
A. பாரதிதாசன் அழகின் சிரிப்பை இயற்றினார்
B. நல்லவர்கள் என்றும் உயர்வர்
C. பாடம் என்னால் படிக்கப்பட்டது
D. ஊக்கமிலார் உயர்வடையார்
Answer : A.
2) தன்வினைச் சொற்றொடரைக் கண்டறிக.
A. மாதவி பாடத்தைக் காண்பித்தாள்
B. கோபி மாடிக்குப் போனான்
C. முருகன் கீழே உருண்டான்
D. தமிழ்ப்பாடம் குமாரால் பயில்விக்கப்பட்டது.
Answer : C.
3) முறையாக அமைந்த சொற்றொடரை தேர்வு செய்க.
A. ஊழ்வினை உருத்துவந் துட்டு மென்பதூஉம்
B. ஊட்டும் ஊழ்வினை உருத்துவந் தென்பதூஉம்
C. உருத்துவந் ஊழ்வினை ஊட்டு மென்பதூஉம்
D. ஊழ்வினை என்பதூஉம் உருத்துவந் தூட்டும்
Answer : A.
4) சுடு - பெயர்ச் சொல்லின் வகை அறிக.
A. காலப்பெயர்
B. பொருட்பெயர்
C. முதனிலைத் தொழிற்பெயர்
D. முதனிலைத் திரிந்த தொழிற்பெயர்
Answer : D.
5) நூ - என்னும் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது?
A. தேர்
B. புத்தகம்
C. அணிகலன்
D. உடை
Answer : C.
6) உ - என்னும் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது?
A. வினா எழுத்து
B. சுட்டெழுத்து
C. இடைச்சொல்
D. வினைச்சொல்
Answer : B.
7) எதிர்ச்சொல் தருக்க - மலர்தல்
A. விரிதல்
B. கூம்பல்
C. சுருங்குதல்
D. தோய்தல்
Answer : B.
8) பொருந்தாத சொல்லைக் கண்டறிக
A. கபிலர்
B. பரணர்
C. ஒளவையார்
D. மோசிகீரனார்
Answer : C.
9) பொருந்தாத சொல்லைக் கண்டறிக
A. சீட்டுக்கவி
B. ஆசுகவி
C. மதுரகவி
D. விகடகவி
Answer : D.
10) செயல்பாட்டு வினை வாக்கியம் கண்டறிக.
A. பரிசை விழாத் தலைவர் வழங்கினார்
B. விழாத் தலைவரால் பரிசு வழங்கப்பட்டது
C. விழாத் தலைவர் பரிசு கொடுத்தார்
D. பரிசை விழாத் தலைவர் வழங்கவில்லை
Answer : B.
ADSENSE HERE!
No comments:
Post a Comment