Breaking News

செவ்வாயில் குடியேற தயாராகும் மனிதகுலம்

ADSENSE HERE!

செவ்வாய் கிரகத்தில் உயிர் வாழும் சாத்தியகூறுகள் அதிகமாக உள்ளதாக
விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் செவ்வாய் கிரகத்தில், மனிதர்கள் உயிர் வாழும் சாத்தியகூறுகள் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய கடந்த 2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கியூரியாசிட்டி என்ற விண்கலத்தை செவ்வாய்க்கு அனுப்பிவைத்தது. செவ்வாய் கிரகத்தில் 2012 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இறங்கிய கியூரியாசிட்டி, அன்று முதல் செவ்வாய் கிரகத்தின் தன்மைகளை புகைப்படங்கள் மூலமாகவும் மண் மற்றும் கற்களின் மாதிரிகள் மூலமாகவும் பூமியிலிருக்கும் விண்வெளி ஆராய்ச்சியாளர்களுக்கு தெரியப்படுத்தி வந்தது.

சமீபத்தில் கியூரியாசிட்டி ரோவர் விண்கலம், செவ்வாய் கிரக பாறைகளை துளையிட்டு ஆய்வு செய்ததில், உயிர் வாழ்தலுக்கு தேவையான சல்பர், கார்பன், ஆக்சிஜன், நைட்ரோஜன் போன்ற பொருட்கள் செவ்வாய் கிரகத்தில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் செவ்வாயில், ஆங்காங்கே களிமண் திட்டுக்கள் இருப்பதையும் கியூரியாசிட்டி ரோவர் கண்டறிந்துள்ளது.எனவே, செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதற்கான முக்கிய ஆதாரம் கிடைத்துள்ளது.

கியூரியாசிட்டி விண்கலம் ஆய்வு செய்த பாறைகள் பலநூறுகோடி ஆண்டுகளுக்கு முன்பே உருவானதாகும். அந்த பாறை இடையே களிமண் இருக்கிறது என்றால் நிச்சயம் தண்ணீரும் இருக்கிறது என்பது தெளிவாகியுள்ளது. தண்ணீர் இருப்பதற்கான ஆதாரம் கிடைத்திருப்பதால் மனிதன் செவ்வாயில் குடியேறும் நாள் வெகு தொலைவில் இல்லை என அர்த்தம் கொள்ளலாம். 
ADSENSE HERE!

No comments:

Post a Comment