Breaking News

TNPSC GROUP 1 தேர்வு தள்ளிவைப்பு

TNPSC GROUP 1 தேர்வு தள்ளிவைப்பு

துணை கலெக்டர், டி.எஸ்.பி., உள்ளிட்ட பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வு, ஜனவரி, 27ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. இது தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. செயலர் விஜயகுமார் வெளியிட்டுள்ள அறிவிப்பு: துணை கலெக்டர், டி.எஸ்.பி., வணிக வரித்துறை உதவி கமிஷனர்,
மாவட்ட பதிவாளர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஆகிய பதவிகளுக்கான குரூப்-1 முதல்நிலைத் தேர்வு, வரும், 30ம் தேதி நடக்கும் எனவும், இதற்கு, 6ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும், ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.

தேர்வுக்கு விண்ணப்பிக்க, 24ம் தேதி வரை, வாய்ப்பு வழங்கப்படுகிறது. இதனால், முதல்நிலைத் தேர்வு, ஜனவரி, 27ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள், இணையதளத்தில் பதிவு செய்த, இரு நாட்களுக்குள், கட்டணங்களை செலுத்த வேண்டும். இவ்வாறு செயலர் தெரிவித்துள்ளார். மொத்தமுள்ள 25 காலி பணியிடங்களுக்கு, ஏற்கனவே, 40 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தற்போது, தேதி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதால், மேலும், 30 ஆயிரம் பேர் வரை விண்ணப்பிக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

VAO தேர்வு முடிவுகள் வெளியானது

VAO தேர்வு முடிவுகள் வெளியானது
கடந்த செப்டம்பர் மாதம் 30ம் தேதி தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்களுக்கான
தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இம்முடிவுகளை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் காணலாம். 1870 பணியிடங்களுக்கு நடந்த இந்த தேர்வை தமிழகம் முழுவதும் சுமார் 10 லட்சம் பேர் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 288

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 288

1. மாங்குரோவ் காடுகளின் வேறு பெயர் - சதுப்புநிலக்காடுகள்

2. கூம்பு வடிவிலான மரங்கள் காணப்படும் இடம் - மலைக்காடுகள்
3. ஊசியிலைக் காடுகளின் வேறு பெயர் - மலைக் காடுகள்
4. தமிழ்நாட்டில் ஊசியிலைக் காடுகள் காணப்படும் இடம்  - பழனி
5. ஒரு நாட்டின் இயற்கை வளம் சீராக அமைய இருக்க வேண்டிய காடுகள் சதவீதம் - 33%
6. நம் நாட்டின் காடுகளின் பரப்பளவு சதவீதம் - 19.39%
7. வரைப்படத்தின் பச்சை நிறம் குறிப்பது - சமவெளிகள்
8. வரைப்படத்தில் மஞ்சள் நிறம் குறிப்பது - பீடபூமிகள்
9. சிங்கங்களுக்கான சரணாலயம் அமைந்துள்ள இடம்  - கிர்பாடுகள்

டி.இ.டி இறுதி தேர்வுப் பட்டியல் வெளியிடுவது எப்போது?

டி.இ.டி இறுதி தேர்வுப் பட்டியல் வெளியிடுவது எப்போது?

டி.இ.டி., இறுதி தேர்வுப் பட்டியல் வெளியிடுவதில், தொடர்ந்து இழுபறி நிலை நிலவுவதால், தேர்வு பெற்றவர்கள், தவியாய் தவித்து வருகின்றனர்.
இதுமட்டுமின்றி பாட வாரியாக உள்ள ஆசிரியர் காலி இடங்களையும், பள்ளி கல்வித்துறை, இப்போதே, இணையதளத்தில் வெளியிட வேண்டும் எனவும், தேர்வு பெற்றவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

டி.இ.டி., தேர்வில், தேர்ச்சி பெற்றதும், மதிப்பெண் மற்றும் இன சுழற்சி அடிப்படையில், தகுதி வாய்ந்த ஆசிரியரை தேர்வு செய்ய, முதலில் டி.ஆர்.பி., திட்டமிட்டிருந்தது. சென்னை, ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில், "டி.இ.டி., தேர்வு, ஒரு தகுதித் தேர்வே; அதன்பின், ஆசிரியரை தேர்வு செய்ய, வேறொரு விதிமுறைகளை உருவாக்க வேண்டும்' என, உத்தரவிடப்பட்டது.

இதைத் தொடர்ந்து, பிளஸ் 2, பட்டப் படிப்பு, ஆசிரியர் பயிற்சி பட்டயப் படிப்பு, பி.எட்., ஆகியவற்றுக்கு, 40 மதிப்பெண், டி.இ.டி., தேர்வுக்கு, 60 மதிப்பெண் என, 100 மதிப்பெண் கணக்கிட்டு, அதனடிப்படையில், தகுதியான ஆசிரியரை தேர்வு செய்யும் புதிய முறையை, தமிழக அரசு அறிவித்தது.

ஜூலையில் தேர்வு பெற்ற, 2,448 பேர் மற்றும் அக்டோபரில் தேர்வு பெற்ற, 19 ஆயிரம் பேருக்கும், புதிய தேர்வு முறை கணக்கிடப்பட்டு, அதனடிப்படையில், இறுதி தேர்வுப் பட்டியல் தயாரிக்கும் பணியில், டி.ஆர்.பி., ஈடுபட்டுள்ளது. அக்., தேர்வில் தேர்வு பெற்றவர்களில், 2 சதவீதம் பேர், தகுதி இல்லாதவர்களாக இருப்பதாக, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்ததால், தேர்வு பெற்றவர்கள் மத்தியில், பீதி நிலவி வருகிறது.

இதனால், இறுதி தேர்வுப் பட்டியலை, ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 26ம் தேதி, பட்டியல் வெளியாகும் என, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்திருந்தன. ஆனால், தற்போது, எந்த தகவலையும் வெளியிடாமல், "பணிகள் நடக்கின்றன; விரைவில் வெளியிடுவோம்" என, தொடர்ந்து கூறி வருகின்றன.

இதுதொடர்பாக, ஏராளமானோர் தினமும், டி.ஆர்.பி., அலுவலகத்திற்கும், பத்திரிகை அலுவலகங்களுக்கும் போன் செய்து, கேட்டபடி உள்ளனர். ஆனால், டி.ஆர்.பி., அதிகாரிகள், தொடர்ந்து மவுனம் காக்கின்றனர். இது, தேர்வு பெற்றவர்கள் மத்தியில், மேலும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

தகுதி வாய்ந்தவர்களின் பட்டியலை, வெளிப்படையாக வெளியிட, டி.ஆர்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பாட வாரியாக உள்ள காலி இடங்கள் பட்டியலை, பள்ளி கல்வித்துறை, இப்போதே, இணையதளத்தில் வெளியிட வேண்டும் எனவும், தேர்வு பெற்றவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 283

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 283

1. மெரிடியன் என்று அழைக்கப்படுவது - தீர்க்க ரேகைகள்

2. புவிக் கோளத்தின் மீது கிழக்கு மேற்காக வரையப்பட்ட கற்பனைக் கோடுகள் - அட்ச ரேகைகள்.
3. பூமியின் சிறிய மாதிரி - புவிக்கோளம்.
4. தீபக்கற்பத்திற்கு எடுத்துக் காட்டு - இந்தியா
5. கடலின் அடிப்பகுதியில் - மலைகள், மலைத் தொடர்கள், குன்றுகள் உள்ளன.
6. தீபகற்பம் என்படுது  - மூன்று பக்கம் நீராலும், ஒரு பக்கம் நிலத்தாலும் சூழப்பட்டுள்ளது.
7. பசுபிக் பெருங்கடலின் பரப்பானது புவியின் பரப்பில்  - மூன்றில் ஒரு பங்கு
8. பெருங்கடல்களின் மிகப் பெரியது - பசுபிக் பெருங்கடல்
9. கண்டங்களை சுற்றி அமைந்து பெருங்கடல்களின் எண்ணிக்கை- 5
10. நைல் பள்ளத்தாக்கு அமைந்துள்ள இடம் - ஆப்ரிக்கா

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 284

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 284

1. இரண்டு உயரந்த நிலப்பகுதிகளுக்குடையே உள்ள பகுதிகள் - பள்ளத்தாக்குகள்

2. முதன்மை தீர்க்கக் கோடு செல்லும் இடம் - கிரீன்விச்
3. கிரீன்விச் வானவியல் ஆராய்ச்சி மையம் அமைந்துள்ள நாடு - இங்கிலாந்து
4. சர்வதேச திட்ட நேரம் கணக்கிட பயன்படுவது - கிரீன்விச் தீர்க்க ரேகை.
5. இந்யிவின் தல நேரத்தை கணக்கிட பயன்படும் தீர்க்க ரேகை - 82 1/2 டிகிரி கிழக்கு
6. இந்தியாவின் தல நேரத்தை கணக்கிடும் தீர்க்க ரேகை செல்லும் வழி - அலகாபாத்
7. அடிப்படை திசைகள் - நான்கு
8. க.செ.மீ. மண் உருவாக ஆகும்காலம் - 1000 ஆண்டுகள்
9. இந்தியாவில் காணப்படும் முக்கிய மண் வகைப்பிரிவுகள் - 5
10. ஆறு கடலுடன் கலக்கும் இடம் - கழிமுகம்.

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 285

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 285

1. ஆற்றுச் சமவெளி மற்றும் கடற்கரைச் சமவெளிகளில் காணப்படும் மண் - வண்டல் மண்.

2. கருப்பு நிறமுடைய மண் - கரிசல் மண்.
3. இந்தியாவின் அரிசிக் கிண்ணம் எனப்படுவது - ஆற்றுச் சமவெளிகள்.
4. ஈரத் பிடித்து வைத்துக் கொள்ளும் மண் - கரிசல் மண்.
5. தக்காணத்தில் லாவா பகுதியில் காணப்படுவது - கரிசல் மண்
6. ரெகர் என்று அழைக்கப்படுவது - கரிசல் மண்.
7. இந்திய நிலப்பரப்பில் வண்டல் மண் அளவு - 24%
8. மண் அரிப்பினால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய நிலப்பரப்பு - 20%
9. மண் அரிமானம் ஏற்படக் காரணம் - காற்று, மழை, வெள்ளம்
10. வறட்சித் தாவரங்கள் வளரும் மண் - பாலை மண்

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 286

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 286

1. மலைச் சரிவுகளில் காணப்படும் மண் - சரணை மண்

2. தோட்டப் பயிர்கள் வளர்ச்சிக்கு ஏற்ற மண் - சரளை மண்
3. வேர்க்கடலை வளர ஏற்ற மண் - செம்மண்
4. செம்மண்ணில் காணப்படுவது - இரும்பு
5. பருத்தி விளைய ஏற்ற மண் - கரிசல் மண்.
6. சிவப்பு நிறமாக உள்ள மண் - செம்மண்
7. தாக்காணத்தின் லாவா பகுதியில் காணப்படுவது  - சரளை மண்
8. ஈரத்தை பிடித்து வைத்துக் கொள்ளும் மண் - கரிசல் மண்
9. 30.உலகத்தின் சர்க்கரைக் கிண்ணம் - கியூபா
10. உலகத்தில் மிக அதிகம் விற்பனையாகும் பொருள் - காபி

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 287

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 287

1. எகிப்தின் வெள்ளைத் தங்கம் என்று அழைக்கப்படுவது - பருத்தி

2. பாலைவனக் கப்பல் என்று அழைக்கப்படுவது - ஒட்டகம்
3. ஈச்ச மரங்கள் வளரும் மண் -பாலை மண்
4. ஆண்டு முழுவதும் பசுமையாக காணப்படும் காடுகள் - பசுமை மாறாக் காடுகள்
5. உயரமும் வலிமையும் மிக்க காடுகள் காணப்படும் இடம் - பசுமை மாறாக் காடுகள்
6. அந்தமான் நிகோபார் தீவுகளில் காணப்படும் காடுகள்  - பசுமை மாறாக் காடுகள்
7. மரச் சாமான்கள் செய்யப் பயன்படும் மரங்கள் உள்ள காடுகள் - இலையுதிர் காடுகள்
8. சுந்தரி மர வகைகள் காணப்படும் மரங்கள் உள்ள காடுகள் - சதுப்பு நிலக் காடுகள்
9. ஆற்றின் கழிமுகப் பகுதியில் வளரும் காடுகள் - சதுப்பு நிலக்காடுகள்
10. பருவக் காற்றுக் காடுகளிட்ன வேறு பெயர் - இலையுதிர் காடுகள்

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 278

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 278

1. பொருளியலின் தந்தை - ஆடம் ஸ்மித்

2. நாடுகளின் செல்வம் என்ற  புத்தகத்தின் ஆசிரியர் - ஆடம் ஸ்மித்
3. கல்வியில் செய்யப்படும் முதலீடு மனிதவளம் மூலதனம் எனப்படும்.
4. பொதுப்பேரவையில் தலைவராக 1954 -ம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியர் - திருமதி. விஜயலட்சுமி பண்டிட்
5. முதல் பானிப்பட் போர் நடைபெற்ற ஆண்டு - கி.பி.1526
6. மாபெரும் வாணிப மையமான கான்ஸ்டாண்டி நோபிள் ஆட்டோமானிய துருக்கியர்களால் கி.பி.1453-ல் கைப்பற்றப்பட்டது.
7. ஆங்கிலப் பேரரசை இந்தியாவில் தோற்றுவித்தவர் - இராபர்ட் கிளைவ்
8. சரஸ்வதி மகால் கட்டியவர் - இரண்டாம் சரபோஜி
9. வேலூர் சிப்பாய் புரட்சி நடைபெற்ற ஆண்டு - 1806
10. ஆழமான மிகப்பரந்த நீர்பரப்புகள் - பெருங்கடல்கள்

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 279

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 279

1. கிராண்ட் கேன்யான் அமைவிடம் - வடஅமரிக்கா

2. ஒயில் என்ற சொல்லின் பொருள் - நடனம்
3. திருவண்ணாமலை மாவட்டம் புரிசை கிராமம் புகழ் பெறக் காரணம் - கூத்துக் கலைஞர்கள்
4. கிழக்குக் கடற்கரைக் கம்பெனி தமிழ்நாட்டில்- ..... கடற்கரை என்று அழைக்கப்படுகிறது. - சோழமண்டலம்
5. நீலகிரி மலையின் உயர்ந்த சிகரம் - தொட்டப்பெட்டா
6. தமிழ்நாட்டின் கடற்கரை நீள ஏறக்குறைய - 1000 கிமீ.
7. தமிழ்நாட்டின் பெரும்பானமை  மொழி - தமிழ்
8. சென்னை மாநிலம் தமிழ்நாடு என்று பெயர், சூட்டப்ட்ட நாள் - 14.01.1968
9. யாருடைய பிறந்த தினம் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது - டாக்டர் ராதாகிருஷ்ணன்
10. யாருடைய பிறந்த தினம் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது - ஜவகர்லால் நேரு

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 280

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 280
1. மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட ஆண்டு - 1956

2. புவி தினத்தை முதன் முதலில் கொண்டாடியவர் - கேலார்ட் நெல்சன்.
3. மகாத்மாக காந்தியடிகள் பிறந்த தினம் - அக்டோபர் 2, 1869
4. தைத்திங்கள் முதல் நாள் - பொங்கல்.
5. திருவோணம் கொண்டாடப்படும் மாநிலம் - கேரளா
6. கதக்களி நடனம் ஆடப்படும் மாநிலம் - கேரளா
7. இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்த நாள் - ஏப்ரல் 1, 2010
8. ஆகாய விமானம் கண்டுபிடித்தவர் - ரைட் சகோதரர்கள்
9. 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களை தொழிற்சாலை அல்லது கடைகளில் பணியமர்த்தக் கூடாது.
10. ஆண்டிஸ் மலைத் தொடர் அமைந்துள்ள கண்டம் - தென்அமெரிக்கா

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 281

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 281

1. ஆல்ப்ஸ் மலைத் தொடர் அமைந்துள்ள கண்டம் - ஐரோப்பா

2. ராக்கி மலைத் தொடர் அமைந்துள்ள கண்டம்  - வட அமெரிக்கா
3. கிளிமஞ்சாரோ அமைந்துள்ள கண்டம் - ஆப்ரிக்கா
4. இந்தியாவில் அமைந்துள்ள பீடபூமி - திபெத் பீடபூமி
5. கிழக்கு ஆசியாவில் காணப்படும் பீடபூமி - திபெத் பீடபூமி
6. வட அமெரிக்காவில் உள்ள பீடபூமி - கொலராடோ பீடபூமி
7. சிந்து கங்கை சமவெளி காணப்படும் இடம் - இந்தியா
8. லியானாஸ் சமவெளி காணப்படும் இடம் - தென்அமெரிக்கா
9. லிம்பார்டி சமவெளி காணப்படும் இடம் - ஐரோப்பா
10. கடல் மட்டத்தில் இருந்து 300 மீட்டர்கள் வரை உயரம் கொண்ட பரந்து விரிந்த நிலப்பரப்புகள் - சமவெளி

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 282

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 282

1. மலைகளை விட உயரம் குறைவாகவும், பூமி மட்டத்திற்கு மேல் உயர்ந்து தட்டையாகவும் உள்ள நிலப்பகுதிகள் - பீடபூமிகள்

2. 0 டிகிரி அட்சக் கோடு - நிலநடு கோடு
3. 23 அரை டிகிரி வடக்கு அட்ச ரேகை - கடக ரேகை
4. 66 அரை வடக்கு அட்ச ரேகை - ஆர்டிக் வட்டம்
5. 66 அரை டிகிரி தெற்கு அட்ச ரேகை - அண்டார்டிக் வட்டம்
6. 23 அரை தெற்கு அட்ச ரேகை மகர ரேகை
7. பூமியின் மீது வரையப்படும் அட்ச ரேகைகளின் எண்ணிக்கை 180
8. வரைபடத்தில் இடங்களை எளிதில் காண பயன்படுவது - அட்சரேகையும், தீர்க்க ரேகையும் சந்திக்கும் இடம்
9. கிரின்வீச் மைய தீர்க்கக் கோடுகள் - 0 டிகிரி
10. மொத்த வரையப்பட்ட தீர்க்க ரேகைகளின் எண்ணிக்கை - 360

தங்களின் கணிதத்திறன் மேம்படுத்த வேண்டுமா!

தங்களின் கணிதத்திறன் மேம்படுத்த வேண்டுமா!

மேதமேடிகல் டிரெய்னிங் மற்றும் டேலன்ட் சர்ச் ப்ரோகிராம்(எம்டிடிஎஸ்) என்பது, முழுமையான கணிதத்தில், விரிவானதொரு கோடைகால
படிப்பாகும். இப்படிப்பானது, கணித சிக்கல்களைத் தீர்ப்பதற்கான திறனை அளிக்கிறது.

இப்படிப்பை முடித்த பலர், TIFR, ISI, IISc, CMI, IIT and University of Wisconsin போன்ற பல்வேறான கல்வி நிறுவனங்களில், கணித ஆராய்ச்சியாளர்களாக பணியாற்றுகிறார்கள்.

இப்படிப்பின் விபரம்

எதிர்கால கணிதவியல் அறிஞர்களை உருவாக்குவதே MTTS படிப்பின் பிரதான நோக்கம். ஒவ்வொரு வருடமும், கோடைகாலமான, மே மற்றும் ஜுன் மாதங்களில், 4 வாரங்கள் நடத்தப்படும் இப்பயிற்சி படிப்பில், மாணவர்கள், கணித சிக்கல்கள் குறித்து அதிக கேள்விகள் கேட்டு, தங்களின் ஆசிரியர்களுடன் இணைந்து பணியாற்றும்படி எதிர்பார்க்கப்படுகிறார்கள்.

இந்த MTTS படிப்பானது, இந்தியா முழுவதும் 3 நிலைகளில் நடத்தப்படுகிறது. பல்வேறு மையங்களில் நடத்தப்படும் இப்படிப்பில், ஒரு நிலைக்கு(level) சுமார் 35 முதல் 40 மாணவர்கள் இடம்பெறுவார்கள். ஒவ்வொரு மாணவருக்கும், சுமார் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை செலவழிக்கப்படுகிறது. இலவச தங்குமிடம் கொடுக்கப்படுவதோடு, திரும்பி வருவதற்கான sleeper class ரயில் டிக்கெட்டும் தரப்படுகிறது.

நடத்தப்படும் முறை

வகுப்புகள், ஒவ்வொரு நாளும், காலை 9.30 முதல் மதியம் 1 மணிவரை நடைபெறும். Problem sessions மற்றும் மாணவர் செமினார்கள், பிற்பகல் 2 மணிமுதல் மாலை 5 மணிவரை நடைபெறும். இத்தகைய தீவிர பயிற்சியின் மூலம், ஒரு மாணவருக்கு, அழுத்தமான சூழலில் பணியாற்றும் பயிற்சி கிடைக்கிறது.

இப்படிப்பில், கணித சிக்கல்களைத் தீர்ப்பதில் பயன்படுத்தப்படும் USP என்ற சிக்கல் வாய்ந்த பயிற்சி முறையானது, மாணவர்களுக்கு பெரும் சவாலாக உள்ளது. இச்செயல்முறையானது, கணிதத்தை கற்கும் வழக்கமான முறைகளிலிருந்து, MTTS முறைக்கு மாணவர்களை இட்டுச் செல்கிறது. குறிப்புகளின் நகல்களும், படிப்பதற்கான சில இலவச உபகரணங்களும் கிடைக்கின்றன.

தேர்வாதல்

இப்படிப்புக்கு, மாணவர்களைத் தேர்வுசெய்ய, 5 நடைமுறைகளைக் கொண்ட, தனித்துவமான வழிமுறைகளை, தேர்வு கமிட்டி பின்பற்றுகிறது. ஒரு ஆண்டின் டிசம்பர் மாதம் 2ம் பாதியில் துவங்கும் இந்த தேர்வுசெய்யும் நடைமுறை, அடுத்தாண்டு, பிப்ரவரி 3ம் சனிக்கிழமையன்று முடிகிறது.

1 மற்றும் 2ம் சுற்றுகள் - விண்ணப்பம் மற்றும் இதர ஆவணங்கள் அடிப்படையில், தகுதியற்றவர்களை நீக்குவதற்கான சுற்றுகள் இவை.

3 மற்றும் 4ம் சுற்றுகள் - ஒரே மாநிலத்தை சேர்ந்த மற்றும் தொடர்புடைய கிரேடிங் முறையைக் கொண்ட மாநிலங்களைச் சேர்ந்த, shortlist செய்யப்பட்ட மாணவர்களிலிருந்து, தகுதியானவர்களை தேர்ந்தெடுத்தல் செயல்முறை, இச்சுற்றுகளில் நடைபெறும்.

5ம் சுற்று - பிராந்திய அடிப்படையில் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதை உறுதிசெய்யும், தேசிய அளவிலான சுற்று இது.

விண்ணப்பித்தல் எவ்வாறு?

விண்ணப்ப படிவம் மற்றும் ஆசிரியரின் பரிந்துரைக் கடிதம் போன்றவை முக்கியமானவை. இந்தக் கடிதத்தின் மூலமாக, ஒரு மாணவரின் உற்சாகம், புரிந்துகொள்ளும் திறன், உறுதியான மற்றும் தீர்மானமான மனப்பாங்கு ஆகியவை மதிப்பிடப்படும்.

இதுதவிர, ஒரு மாணவரின், பிராந்திய மற்றும் கிராமப்புற பின்னணியும் கணக்கில் எடுக்கப்படும். ஒரே கல்வி நிறுவனத்திலிருந்து, அதிகபட்சம், 2 பேரை மட்டுமே தேர்வுசெய்ய வேண்டும் என்ற விதியும் உண்டு. மாணவிகளின் பங்கேற்பை உறுதிசெய்ய, அவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான சிறப்பு முயற்சியும் மேற்கொள்ளப்படுகிறது.

பழைய மாணவர்கள், அடுத்த நிலைக்காக விண்ணப்பித்தால், முந்தைய நிலையில் அவர்களின் செயல்பாடு கருத்தில் கொள்ளப்பட்டு, அதனடிப்படையில் தேர்வு நடைபெறும்.

MTTS -ஐ பொறுத்தவரை, வெறுமனே பொழுதைப் போக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஏனெனில், இதன்மூலம், தகுதியான மாணவர்கள், வாய்ப்பு பெறுவது தடைபடும்.

தனிநபர் கவனம்

இப்பயிற்சி படிப்பில், பல்வேறு கல்வி நிறுவனங்களின் கணிதத்துறையில் ஆசிரியராக பணியாற்றும் நிபுணத்துவம் பெற்றவர்கள், இங்கு ஆசிரியர்களாக பணியாற்றுவர். அவர்கள், வளாகத்திற்குள்ளேயே தங்கியிருந்து, மாணவர்கள், தங்களுடன் கலந்துரையாடி, சந்தேகங்களைப் போக்கிக் கொள்ள துணைபுரிகின்றனர்.

தேனீர் இடைவேளி மற்றும் உணவு இடைவேளை நேரங்களிலும் கூட, மாணவர்கள் தங்களின் சந்தேகங்களைப் போக்க, ஆசிரியர்கள் துணைபுரிகின்றனர். ஞாயிற்றுக்கிழமைகளிலும் கூட, தங்களின் தனிப்பட்ட சிக்கல்கள் தொடர்பாக, ஆசிரியர்களின் தங்குமிடம் சென்று, அதுகுறித்து விவாதிக்க, மாணவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

மாணவர் கருத்தரங்கள்

இப்பயிற்சி படிப்பின் 2வது வார இறுதியில், தாங்கள் தேர்வு செய்த Topic தொடர்பாக, MTTS கற்பித்தல் முறையில், ஒவ்வொரு மாணவரும் ஒரு Presentation வழங்க வேண்டும். இம்முறையில், பார்வையாளர்களிடம், கேள்விகள் கேட்கப்படுகின்றன. (பார்வையாளர்கள் என்பவர்கள், இதர மாணவர்களும், ஆசிரியர்களும் அடங்கிய குழுவினர்தான்). பார்வையாளர்கள், பதிலை யோசித்து முடிவு செய்ய, இடைவேளையும் தரப்படுகிறது.

இந்த செமினார் மூலமாக, கூட்டத்தைக் கண்டு பேச பயப்படும் மாணவர்கள், தங்களின் அச்சமும், கூச்சமும் நீங்கி, தங்களின் கருத்தை தெளிவாக வழங்கும் ஆற்றலைப் பெறுகிறார்கள். மேலும், இதன்மூலமாக, மாணவர்களின் கற்பிக்கும் ஆற்றலும் மேம்படுகிறது.

இத்தகைய Presentation வழங்க, ஒரு சிக்கலின் பல அம்சங்களை மாணவர்கள் ஆராய வேண்டியுள்ளதால், அது அவர்களின் கணித அறிவையும், சிக்கல் தீர்க்கும் திறனையும் வளர்ச்சியடைய செய்கிறது. ஏனெனில், இந்த நிகழ்ச்சியில், நிறைய குறுக்கு கேள்விகள் கேட்கப்படும்.

வசதிகள் மற்றும் உள்கட்டமைப்பு

பொதுவாக, 3 நிலைகளிலான பயிற்சியும் ஒரே மையத்தில் வழங்கப்பட்டாலும், மாணவர்களை அதிகம் கொண்ட 0 நிலை பயிற்சியானது, 3 மையங்களில் வழங்கப்படுகிறது. ஆணுக்கும், பெண்ணுக்கும், தனித்தனி விடுதி வசதிகள் உண்டு. ஞாயிற்றுக்கிழமைகளில், சில சமயம், இன்ப சுற்றுலாக்களும் உண்டு.

ஒவ்வொரு பயிற்சி மையத்திலும், உள்கட்டமைப்பு வசதிகள் வித்தியாசப்படும். உணவைப் பொறுத்தவரை, தென்னிந்திய மையங்களில், அதற்கேற்ற உணவு வழங்கப்படுகிறது. இதனால், வடஇந்திய மாணவர்கள் சிரமமாக உணரலாம். சில இடங்களில், உள்கட்டமைப்பு வசதிகளும் குறைபாடுடையதாக இருக்கலாம்.

ஆனால், எத்தனை குறைகள் இருந்தாலும், கணிதத்தை காதலிப்பவர்கள், இவற்றை ஒரு குறையாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். அவர்கள், தங்களின் பாடம் தொடர்பாக அறிந்துகொள்ள, அனுபவம் பெற, விவாதிக்க, MTTS ஏராளமாக வாய்ப்புகளை வழங்குகிறது என்பது மட்டும் நிஜம்.

நிலைகள் பற்றிய விபரங்கள்

நிலை 0 - இளநிலை கணிதப் படிப்பில், முதல் மற்றும் இரண்டாமாண்டு படிக்கும் மாணவர்கள் இருப்பார்கள்.

நிலை I - 2 மற்றும் 3ம் ஆண்டு கணித இளநிலை மாணவர்கள் இருப்பார்கள்.

நிலை II - முதலாமாண்டு முதுநிலை மாணவர்கள்.

நிலை 0ன் பாடத்திட்டம்

Basic real analysis, Linear Algebra, Geometry(curve tracing, sketching of surfaces and classification of quadric surfaces) and Discrete probability, Combinatorics and Elementray number theory போன்றவை இருக்கும்.

நிலை 2 மற்றும் 3 பாடத்திட்டம்

MTTS முறையிலான, Algebra, Analysis, Geometry and Topology போன்றவை இருக்கும்.

தேர்வு கிடையாது

இப்பயிற்சி படிப்பை முடித்தப்பிறகு, தேர்வுகள் நடத்தப்படாது. ஒவ்வொரு பங்கேற்பாளருக்கும், தனித்தனியாக Grade வழங்கப்படும். மாணவர்கள் விரும்பினால், அது மற்றவர்களுக்கும் தெரிவிக்கப்படும்.

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 274

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 274

1. விஜய நகர பேரரசு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - கி.பி.1336

2. இந்தியக் கிளி என அழைக்கப்பட்ட கவிஞர் - அமிர்குஸ்ரு
3. முதலாம் தரைன் போரில் முகமது கோரியை தோற்கடித்தவர் - பிருதிவிராசன்
4. காவிரி ஆற்றின் குறுக்கே கல்லணையைக் கட்டியவர் - கரிகால சோழன்
5. தர்மபாலர் புகழ்மிக்க பல்கலைக்கழகத்தை விக்ரமசீலம் என்ற இடத்தில் நிறுவினார்
6. பூமியின் மத்தியில் கிழக்கு மேற்காக செல்லும் கோடு - பூமத்திய ரேகை
7. தெற்கு வடக்காக செல்லும் கோடு - தீர்க்கக் கோடு
8. பூமியின் மொத்த கோண அளவு - 360º
9. 0º டிகிரி தீர்க்கக் கோடு என்பது - அட்சக்கோடு
10. சூரிய குடும்பத்தின் நாயகன் - சூரியன்

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 275

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 275

1. சந்திரன் பூமியை சுற்றிவர ஏறத்தாழ 27.3 நாள்கள் எடுத்துக்கொள்கிறது.

2. பல கோடிக்கணக்கான விண் மீன்கள் தொகுதியை அண்டம் என்பர்
3. பெண்களைக் காத்திட 1930 ஆண்டில் அடையாற்றில் ஒளவை இல்லம் தொடங்கப்பட்டது.
4. மாநகராட்சி தலைவரின் பதவிக்காலம் 5 ஆண்டுகள்
5. இந்தியாவில் இக்காலத்தில் செயற்படும் உள்ளாட்சி அமைப்பை முதன் முதலில் நடைமுறைப்படுத்தியவர் - ரிப்பன் பிரபு
6. இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் - முத்துலட்சுமி அம்மையார்
7. தொலை நோக்கியில் மட்டுமே புலப்படும் கோள் - யுரேனஸ்
8. பூமியின் அச்சு 231/2º டிகிரி சாய்ந்துள்ளது.
9. நாளந்தா பல்கலைக்கழகம் குமார குப்தர் காலத்தில் உருவாக்கப்பட்டது.
10. இரண்டாம் அசோகர் என அழைக்கப்பட்டவர் - கனிஷ்கர்

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 276

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 276

1. மெகஸ்தனிஸ் எழுதிய நூல் - இண்டிகா

2. பணம் மட்டுமே பணத்தின் தேவையை சந்திக்கும் எனஅறு கூறியவர் - வாக்கர்
3. சாலைப் போக்குவரத்தின் சட்ட திட்டங்கள் அமலுக்கு வந்த ஆண்டு - 1989
4. தேசிய மனித உரிமைகள் ஆணையம் 1993 ஆண்டு ஏற்படுத்தப்பட்டது.
5. உலக எழுத்தறிவு தினம் - செப்டம்பர் 8.
6. தேசிய ஒருமைப்பாட்டு தினமாக கடைபிடிக்கப்படும் நாள் - நவம்பர் 19
7. தந்தித் தொடர்பு கண்டுபிடிக்கப்பட்ட வருடம் -1844
8. பருத்தி கரிசல் மண்ணில் அதிகமாக விளைகிறது.
9. நெல் ஒரு அயனமண்டல பயிராகும்.
10. மேக்னடைட் தாதுவை கொண்ட கனிமம் - இரும்பு

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 277

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 277

1. இந்தியாவின் மிகப்பெரிய நீர் மின்சக்திநிலையம் அமைந்துள்ள இடம் - பக்ராநங்கல்
2. பிளாசி போர் நடைபெற்ற ஆண்டு - 1757
3. கி.பி. 1857-ம் ஆண்டு புரட்சி கானிங் என்பவர் காலத்தில் தோன்றியது.
4. இரும்பு பாதையின் தந்தை என அழைக்கப்படுபவர் - டல்ஹெசி
5. நிலையான நிலவரித் திடிடத்தை அறிமுகப்படுத்தியவர் -  காரன்வாலிஸ்
6. ஒழுங்குமுறைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு - 1773
7. அட்லாண்டிக் பேராழி நீண்ட S வடிவம்
8. இந்திய உச்ச நீதிமன்றம் அமைந்துள்ள இடம் - புதுதில்லி
9. பன்னாட்டு நீதிமன்றம் ஹாலந்து நாட்டில் உள்ள ஹேக் நகரில் உள்ளது.
10. இந்திய அரசு கல்வி உரிமைச்சட்டத்தை நடைமுறைப்படுத்திய நாள் - 1 ஏப்ரல் 2010

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 273

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 273

1. ஹரப்பா நாகரிகம் - நகர நாகரிகம்

2. திருவள்ளுவர் பிறந்த ஆண்டாக தமிழறிஞர்கள் கருதும் ஆண்டு - கி.மு.31
3. இடைச்சங்கம் நடைபெற்ற நகரம் - கபாடபுரம்
4. பின் வேதகாலத்தில் கல்வியில் சிறந்து விளங்கிய பெண்களுள் ஒருவர் -கார்கி
5. சுனாமி என்ற சொல் ஜப்பான் மொழியிலிருந்து வந்தது.
6. கடல் மட்டத்தில் நிலவும் காற்றழுத்தத்தின் சராசரி அளவு 1013
7. மில்லிபார்களாகும்
8. பர்கான் எந்த செயலோடு தொடர்புடையது - படிய வைத்தல் நிலத்தோற்றம்.
9. பான்ஜியா 7 பெரிய தட்டுகளாக உடைக்கப்பட்டுள்ளது.
10. துளசிதாசர் எழுதிய நூல் - இராமசரிதமானஸ்

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 268

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 268

1. இந்தியாவின் தென் கிழக்கு கடற்கரைக் கிராமம் - தனுஷ்கோடி

2. எலிபெண்டா அருவி அமைந்துள்ள இடம் - ஷில்லாங்
3. காஷ்மீரின் தலைநகர் - ஸ்ரீநகர்
4. தால் ஏரி அமைந்துள்ள இடம் - ஸ்ரீநகர்
5. மேகாலயா மாநிலத்தின் தலைநகரம்  - ஷில்லாங்
6. புவி ஈர்ப்பு விசையை கண்டுபிடித்தவர் - சர் ஐசக் நியூட்டன்
7. பழங்காலத்தில் தகடூர் என்று அழைக்கப்பட்ட பகுதியின் இன்றைய பெயர் - தருமபுரி
8. இயேசுவை சிலுவையில் அறைந்த தினம் - புனித வெள்ளிக்கிழமை
9. கிருத்துவ மதத்தினரால் கொண்டாடப்படும் விழா - கிறிஸ்துமஸ்
10. சீக்கிய சமயத்தினரால் கொண்டாடப்படுது - மகாவீர் ஜெயந்தி

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 269

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 269

1. புத்த சமயத்தினரால் கொண்டாடப்படுவது - புத்த பௌர்ணமி

2. பொதுமக்களுக்குத் தேவையான தகவல்களை வழங்கும் நாட்டுப்புறக் கலை - வில்லுப்பாட்டு
3. கைவினைத் தொழிலாளர்களால் முதன் முதலில் செய்யப்பட்ட பொருள் - செங்கல்
4. வானவில்லில் காணப்படும் நிறங்களின் எணணிக்கை - ஏழு
5. கருப்பு நிற மட்பாண்டங்கள் கிடைக்கும் மாவட்டம் - திருநெல்வேலி
6. சிவப்பு மற்றும் கருப்பு நிற மட்பாண்டங்கள் கிடைக்கும் மாவட்டம் - வேலூர்
7. பத்தமடை அமைந்துள்ள மாவட்டம் - திருநெல்வேலி
8. தமிழ்நாட்டில் பாய் தயாரிப்பில் புகழ் பெற்ற இடம் - பந்தமடை
9. தமிழ்நாட்டில் முக்கடல்களும் சந்திக்கும் இடம் - கன்னியாகுமரி
10. 24 மணி நேரத்தில் 3 அடி உயரம் வரை வளரக் கூடிய தாவரம் - மூங்கில்.

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 270

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 270

1. சங்க காலத்தை அறிய உதவும் சான்றுகள்- அசோகரது
கல்வெட்டுகள், உத்திரமேரூர் கல்வெட்டுகள், ஆதிச்ச நல்லூர் கல்வெட்டுகள்
2. சங்க காலத்தில் தமிழ்நாட்டில் வடக்கு எல்லை - வேங்கடம்
3. முதற் சங்கம் அமைவிடம் - தென் மதுரை
4. இரண்டாவது சங்கம் அமைவிடம் - கபாடபுரம்
5. மூன்றாவது சங்கம் அமைவிடம் - மதுரை
6. இரண்டாம் சங்க காலத்தில் எழுதப்பட்ட தமிழின் அடிப்படை நூல் - தொல்காப்பியம்
7. சங்க காலம் எனப்படுவது - கி.பி. 300 முதல் கி.மி. 300 வரை
8. நிலிந்தரு, குருவிற்பாண்டியன் காலத்தில் அரங்கேற்றப்பட்ட நூல் - தொல்காப்பியம்
9. வஞ்சி யாருடைய தலைநகரம்  - சேர அரசர்கள்
10. பனம் பூ மாலையை அணிந்தவர்கள் - சேர அரசர்கள்

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 271

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 271

1. தொண்டி யாருடைய துறைமுகம்  - சேர அரசர்கள்

2. முசிறி யாருடைய துறைமுகம் - சேர அரசர்கள்
3. சேர நாடு உள்ளடக்கிய பகுதிகள் - கேவை, கேரளம்
4. உறையூர் யாருடைய தலைநகரம் - சோழர்கள்
5. ஆத்திப் பூ மாலையை அணிந்தவர்கள் - சோபூர்
6. சோழ நாடு உள்ளடக்கிய பகுதிகள் - திருச்சி, தஞ்சாவூர்
7. பணடைய சோபூர்களின் சின்னம் எது? புலி
8. சோபூர்களின் துறைமுகம் - காவிரிபூம்பட்டினம்
9. சிலப்பதிகாரம் இயற்றிய இளங்கோவடிகளின் அண்ணன் - செங்குட்டுவன்
10. இமயம் வரைச் சென்று கல் எடுத்து வந்து கண்ணகிக்கு நினைவுச் சின்னம் எழுப்பிய மன்னர் -செங்கட்டுவன்

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 272

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 272

1. சாலையில் கவனி என்பதற்கான எச்சரிக்கை விளக்கு - மஞ்சள்
2. சாலையில் செல் எதன்பதற்கான எச்சரிக்கை விளக்கு - பச்சை
3. சாலையில் நில் என்பதற்கான எச்சரிக்கை விளக்கு - சிவப்பு
4. பாம்பன் பாலம் அமைந்துள்ள மாவட்டம் - இராமநாதபுரம்
5. கடற்கரை கோயிலும், குகைக் கோயிலும் காணப்படும் இடம் - மாமல்லபுரம்
6. கொனார்க் அமைந்துள்ள மாநிலம் - ஒரிசா
7. கொனார்க்கில் அமைந்துள்ள கோயில் - சூரியனார் கோயில்
8. இந்தியாவின் வடக்கிழக்கில் உள்ளது - அசாம்
9. காசி ரங்கா உயிரியியல் பூங்கா அமைந்துள்ள இடம் - அசாம்
10. மூன்று கோடி மரங்களை நட்டு நோபல் பரிசு பெற்றவர் - வாங்காரி மார்தோய்.

1000 உடற்கல்வி ஆசிரியர்கள் நியமனம்

1000 உடற்கல்வி ஆசிரியர்கள் நியமனம்

கல்வித்துறையில், நான்காவது நாளாக நேற்று நடந்த பணி நியமன கலந்தாய்வில், உடற்கல்வி ஆசிரியர், 1,025 பேர் உட்பட, 1,453 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.


கடந்த, 21ம் தேதி, அமைச்சுப் பணியில் இருந்து, தகுதி வாய்ந்தவர்களுக்கு, முதுகலை ஆசிரியர் பணி வழங்குவதற்கான கலந்தாய்வு நடந்தது. 22ம் தேதி, ஓவிய ஆசிரியர் நியமன கலந்தாய்வும்; 23ம் தேதி, காவலர் மற்றும் துப்புரவு பணியாளர் நியமன கலந்தாய்வும் நடந்தது. நான்காவது நாளான நேற்று, 1,025 உடற்கல்வி ஆசிரியர், கலை ஆசிரியர், 304 பேர், தையல் ஆசிரியர், 84 பேர் மற்றும் இசை ஆசிரியர், 40 பேர் உட்பட, 1,453 பேருக்கான நியமனம் நடந்தது.

அந்தந்த மாவட்ட தலைமை இடங்களில், இணையதளம் வழியாக, கலந்தாய்வு நடந்தது. சென்னை மாவட்டத்தில், உடற்கல்வி ஆசிரியர், 31 பேர், இசை ஆசிரியர், இரண்டு, ஓவிய ஆசிரியர், நான்கு, தையல் ஆசிரியர், மூன்று பேர் என, 40 ஆசிரியர் பணியிடங்கள், ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதற்கான கலந்தாய்வு, சேத்துப்பட்டு, எம்.சி.சி., பள்ளியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் நடந்தது.

"மாநிலம் முழுவதும், அனைத்து பணி நியமனங்களும் நடந்து முடிந்தன; 1,453 பேருக்கும், சம்பந்தபட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், பணி நியமன உத்தரவுகளை வழங்கினர்&' என, பள்ளி கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 264

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 264

1. ஒயில் என்ற சொல்லின் பொருள் - நடனம்

2. திருவண்ணாமலை மாவட்டம் புரிசை கிராமம் புகழ் பெறக் காரணம் - கூத்துக் கலைஞர்கள்
3. கிழக்குக் கடற்கரைக் கம்பெனி தமிழ்நாட்டில்- ..... கடற்கரை என்று அழைக்கப்படுகிறது. - சோழமண்டலம்
4. நீலகிரி மலையின் உயர்ந்த சிகரம் - தொட்டப்பெட்டா
5. தமிழ்நாட்டின் கடற்கரை நீள ஏறக்குறைய - 1000 கிமீ.
6. தமிழ்நாட்டின் பெரும்பானமை  மொழி - தமிழ்
7. சென்னை மாநிலம் தமிழ்நாடு என்று பெயர், சூட்டப்ட்ட நாள் - 14.01.1968
8. யாருடைய பிறந்த தினம் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது - டாக்டர் ராதாகிருஷ்ணன்
9. யாருடைய பிறந்த தினம் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது - ஜவகர்லால் நேரு
10. மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட ஆண்டு - 1956

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 265

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 265

1. புவி தினத்தை முதன் முதலில் கொண்டாடியவர் - கேலார்ட் நெல்சன்.

2. மகாத்மாக காந்தியடிகள் பிறந்த தினம் - அக்டோபர் 2, 1869
3. தைத்திங்கள் முதல் நாள் - பொங்கல்.
4. திருவோணம் கொண்டாடப்படும் மாநிலம் - கேரளா
5. கதக்களி நடனம் ஆடப்படும் மாநிலம் - கேரளா
6. இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்த நாள் - ஏப்ரல் 1, 2010
7. ஆகாய விமானம் கண்டுபிடித்தவர் - ரைட் சகோதரர்கள்
8. 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களை தொழிற்சாலை அல்லது கடைகளில் பணியமர்த்தக் கூடாது.
9. ஆண்டிஸ் மலைத் தொடர் அமைந்துள்ள கண்டம் - தென்அமெரிக்கா
10. ஆல்ப்ஸ் மலைத் தொடர் அமைந்துள்ள கண்டம் - ஐரோப்பா

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 266

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 266

1. ராக்கி மலைத் தொடர் அமைந்துள்ள கண்டம்  - வட அமெரிக்கா

2. கிளிமஞ்சாரோ அமைந்துள்ள கண்டம் - ஆப்ரிக்கா
3. இந்தியாவில் அமைந்துள்ள பீடபூமி - திபெத் பீடபூமி
4. கிழக்கு ஆசியாவில் காணப்படும் பீடபூமி - திபெத் பீடபூமி
5. வட அமெரிக்காவில் உள்ள பீடபூமி - கொலராடோ பீடபூமி
6. சிந்து கங்கை சமவெளி காணப்படும் இடம் - இந்தியா
7. லியானாஸ் சமவெளி காணப்படும் இடம் - தென்அமெரிக்கா
8. லிம்பார்டி சமவெளி காணப்படும் இடம் - ஐரோப்பா
9. கடல் மட்டத்தில் இருந்து 300 மீட்டர்கள் வரை உயரம் கொண்ட பரந்து விரிந்த நிலப்பரப்புகள் - சமவெளி
10. மலைகளை விட உயரம் குறைவாகவும், பூமி மட்டத்திற்கு மேல் உயர்ந்து தட்டையாகவும் உள்ள நிலப்பகுதிகள் - பீடபூமிகள்

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 267

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 267

1. 0 டிகிரி அட்சக் கோடு - நிலநடு கோடு

2. 23 அரை டிகிரி வடக்கு அட்ச ரேகை - கடக ரேகை
3. 66 அரை வடக்கு அட்ச ரேகை - ஆர்டிக் வட்டம்
4. 66 அரை டிகிரி தெற்கு அட்ச ரேகை - அண்டார்டிக் வட்டம்
5. 23 அரை தெற்கு அட்ச ரேகை மகர ரேகை
6. பூமியின் மீது வரையப்படும் அட்ச ரேகைகளின் எண்ணிக்கை 180
7. வரைபடத்தில் இடங்களை எளிதில் காண பயன்படுவது - அட்சரேகையும், தீர்க்க ரேகையும் சந்திக்கும் இடம்
8. கிரின்வீச் மைய தீர்க்கக் கோடுகள் - 0 டிகிரி
9. மொத்த வரையப்பட்ட தீர்க்க ரேகைகளின் எண்ணிக்கை - 360
10. மெரிடியன் என்று அழைக்கப்படுவது - தீர்க்க ரேகைகள்

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 263

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 263
1. புவிக் கோளத்தின் மீது கிழக்கு மேற்காக வரையப்பட்ட கற்பனைக் கோடுகள் - அட்ச ரேகைகள்.

2. பூமியின் சிறிய மாதிரி - புவிக்கோளம்.
3. தீபக்கற்பத்திற்கு எடுத்துக் காட்டு - இந்தியா
4. கடலின் அடிப்பகுதியில் - மலைகள், மலைத் தொடர்கள், குன்றுகள் உள்ளன.
5. தீபகற்பம் என்படுது  - மூன்று பக்கம் நீராலும், ஒரு பக்கம் நிலத்தாலும் சூழப்பட்டுள்ளது.
6. பசுபிக் பெருங்கடலின் பரப்பானது புவியின் பரப்பில்  - மூன்றில் ஒரு பங்கு
7. பெருங்கடல்களின் மிகப் பெரியது - பசுபிக் பெருங்கடல்
8. கண்டங்களை சுற்றி அமைந்து பெருங்கடல்களின் எண்ணிக்கை- 5
9. ஆழமான மிகப்பரந்த நீர்பரப்புகள் - பெருங்கடல்கள்
10. கிராண்ட் கேன்யான் அமைவிடம் - வடஅமரிக்கா


ஆங்கில பட்டதாரி ஆசிரியர்கள் 15 ஆயிரம் பேர் தேவை - டி.ஆர்.பி.

ஆங்கில பட்டதாரி ஆசிரியர்கள் 15 ஆயிரம் பேர் தேவை - டி.ஆர்.பி.

அடுத்த, ஐந்து ஆண்டுகளில், ஆங்கில பட்டதாரி ஆசிரியர் தேவை, 15 ஆயிரத்திற்கும் அதிகமாக இருக்கும் என, டி.ஆர்.பி., வட்டாரங்கள்
தெரிவித்தன. வரும் ஆண்டுகளில், தரம் உயர்த்தப்படும் பள்ளிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும். எனவே, ஆசிரியர் நியமனங்களுக்கு பஞ்சம் இருக்காது என, எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து, துறை வட்டாரங்கள் கூறியதாவது: டி.இ.டி., தேர்வு வழியாக, தற்போது, 25 ஆயிரம் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். ஆண்டுதோறும், ஓய்வு பெறும் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புதல், புதிய மற்றும் தரம் உயர்த்தப்படும் பள்ளிகளுக்கு, ஆசிரியர் பணியிடங்கள் என, ஆண்டுதோறும், புதிய ஆசிரியர் நியமன எண்ணிக்கை, கணிசமாகவே இருக்கும்.பட்டதாரி ஆசிரியரில், தமிழ், வரலாறு, அறிவியல் பாடங்களில் படித்தவர்கள், எண்ணிக்கையில் அதிகமாக உள்ளனர்.

ஆனால், ஆங்கிலம் மற்றும் கணிதப் பாடங்களுக்கு, தேவை அதிகமாக உள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில், ஆங்கில பட்டதாரி ஆசிரியர் மட்டும், 15 ஆயிரத்திற்கும் அதிகமாக தேவைப்படுவர்.எனவே, பி.ஏ., - பி.எட்., ஆங்கிலம் படிப்பவர்கள், எளிதாக, டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெறுவதுடன், உடனடியாக வேலை வாய்ப்பையும் பெற முடியும்.இவ்வாறு, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன.

கணக்கு பட்டதாரிகள் தேவை பற்றிய புள்ளிவிவரம் தரப்படவில்லை. ஆனால், முதுகலை கணக்கு பட்டதாரிகள் ஆசிரியர்கள் தேவையும் அதிகரித்து வருவதாகக் கூறப்பட்டது.ஒவ்வொரு ஆண்டும், சராசரியாக, 10 ஆயிரம் முதல், 15 ஆயிரம் ஆசிரியர் வரை, புதிதாக நியமிக்கப்படுகின்றனர். வரும் ஆண்டுகளில், தரம் உயர்த்தப்படும் பள்ளிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும். எனவே, ஆசிரியர் நியமனங்களுக்கு பஞ்சம் இருக்காது என, எதிர்பார்க்கப்படுகிறது.

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 258

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 258

1. நைல் பள்ளத்தாக்கு அமைந்துள்ள இடம் - ஆப்ரிக்கா

2. இரண்டு உயரந்த நிலப்பகுதிகளுக்குடையே உள்ள பகுதிகள் - பள்ளத்தாக்குகள்
3. முதன்மை தீர்க்கக் கோடு செல்லும் இடம் - கிரீன்விச்
4. கிரீன்விச் வானவியல் ஆராய்ச்சி மையம் அமைந்துள்ள நாடு - இங்கிலாந்து
5. சர்வதேச திட்ட நேரம் கணக்கிட பயன்படுவது - கிரீன்விச் தீர்க்க ரேகை.
6. இந்யிவின் தல நேரத்தை கணக்கிட பயன்படும் தீர்க்க ரேகை - 82 1/2 டிகிரி கிழக்கு
7. இந்தியாவின் தல நேரத்தை கணக்கிடும் தீர்க்க ரேகை செல்லும் வழி - அலகாபாத்
8. அடிப்படை திசைகள் - நான்கு
9. 1 க.செ.மீ. மண் உருவாக ஆகும்காலம் - 1000 ஆண்டுகள்
10. இந்தியாவில் காணப்படும் முக்கிய மண் வகைப்பிரிவுகள் - 5

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 259

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 259

1. ஆறு கடலுடன் கலக்கும் இடம் - கழிமுகம்.

2. ஆற்றுச் சமவெளி மற்றும் கடற்கரைச் சமவெளிகளில் காணப்படும் மண் - வண்டல் மண்.
3. கருப்பு நிறமுடைய மண் - கரிசல் மண்.
4. இந்தியாவின் அரிசிக் கிண்ணம் எனப்படுவது - ஆற்றுச் சமவெளிகள்.
5. ஈரத் பிடித்து வைத்துக் கொள்ளும் மண் - கரிசல் மண்.
6. தக்காணத்தில் லாவா பகுதியில் காணப்படுவது - கரிசல் மண்
7. ரெகர் என்று அழைக்கப்படுவது - கரிசல் மண்.
8. இந்திய நிலப்பரப்பில் வண்டல் மண் அளவு - 24%
9. மண் அரிப்பினால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய நிலப்பரப்பு - 20%
10. மண் அரிமானம் ஏற்படக் காரணம் - காற்று, மழை, வெள்ளம்

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 260

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 260

1. வறட்சித் தாவரங்கள் வளரும் மண் - பாலை மண்

2. மலைச் சரிவுகளில் காணப்படும் மண் - சரணை மண்
3. தோட்டப் பயிர்கள் வளர்ச்சிக்கு ஏற்ற மண் - சரளை மண்
4. வேர்க்கடலை வளர ஏற்ற மண் - செம்மண்
5. செம்மண்ணில் காணப்படுவது - இரும்பு
6. பருத்தி விளைய ஏற்ற மண் - கரிசல் மண்.
7. சிவப்பு நிறமாக உள்ள மண் - செம்மண்
8. தாக்காணத்தின் லாவா பகுதியில் காணப்படுவது  - சரளை மண்
9. ஈரத்தை பிடித்து வைத்துக் கொள்ளும் மண் - கரிசல் மண்
10. உலகத்தின் சர்க்கரைக் கிண்ணம் - கியூபா

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 261

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 261

1. உலகத்தில் மிக அதிகம் விற்பனையாகும் பொருள் - காபி

2. எகிப்தின் வெள்ளைத் தங்கம் என்று அழைக்கப்படுவது - பருத்தி
3. பாலைவனக் கப்பல் என்று அழைக்கப்படுவது - ஒட்டகம்
4. ஈச்ச மரங்கள் வளரும் மண் -பாலை மண்
5. ஆண்டு முழுவதும் பசுமையாக காணப்படும் காடுகள் - பசுமை மாறாக் காடுகள்
6. உயரமும் வலிமையும் மிக்க காடுகள் காணப்படும் இடம் - பசுமை மாறாக் காடுகள்
7. அந்தமான் நிகோபார் தீவுகளில் காணப்படும் காடுகள்  - பசுமை மாறாக் காடுகள்
8. மரச் சாமான்கள் செய்யப் பயன்படும் மரங்கள் உள்ள காடுகள் - இலையுதிர் காடுகள்
9. சுந்தரி மர வகைகள் காணப்படும் மரங்கள் உள்ள காடுகள் - சதுப்பு நிலக் காடுகள்
10. ஆற்றின் கழிமுகப் பகுதியில் வளரும் காடுகள் - சதுப்பு நிலக்காடுகள்

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 262

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 262

1. பருவக் காற்றுக் காடுகளிட்ன வேறு பெயர் - இலையுதிர் காடுகள்

2. மாங்குரோவ் காடுகளின் வேறு பெயர் - சதுப்புநிலக்காடுகள்
3. கூம்பு வடிவிலான மரங்கள் காணப்படும் இடம் - மலைக்காடுகள்
4. ஊசியிலைக் காடுகளின் வேறு பெயர் - மலைக் காடுகள்
5. தமிழ்நாட்டில் ஊசியிலைக் காடுகள் காணப்படும் இடம்  - பழனி
6. ஒரு நாட்டின் இயற்கை வளம் சீராக அமைய இருக்க வேண்டிய காடுகள் சதவீதம் - 33%
7. நம் நாட்டின் காடுகளின் பரப்பளவு சதவீதம் - 19.39%
8. வரைப்படத்தின் பச்சை நிறம் குறிப்பது - சமவெளிகள்
9. வரைப்படத்தில் மஞ்சள் நிறம் குறிப்பது - பீடபூமிகள்
10. சிங்கங்களுக்கான சரணாலயம் அமைந்துள்ள இடம்  - கிர்காடுகள்

TNPSC GROUP 2 & 4 - தமிழ் வினா விடைகள் 252

TNPSC GROUP 2 & 4 - தமிழ் வினா விடைகள் 252

*  காதலி மாட்டுள்ளம் வைப்பார்க்குத் துயிலில்லை - நான்மணிக்கடிகை


*  ஊனைத் தின்று ஊனைப் பெருக்குதல் - இன்னா நாற்பது

*  இளமையை மூப்பு என்றுணர்தல் இனிதே - இனியவை நாற்பது

*  புல் நுனிமேல் நீர் போல் நிலையாமை - நாலடியார்

*  அகம் குன்றி மூக்கில் கரியாருடைத்து - முப்பால்

*  முல்லையும் குறிஞ்சியும் நல்லியல்பு இழந்தால் பாலையாகும்

*  மருந்துப் பெயர் அல்லாத பதினெண் கீழ்க்கணக்கு நூல் - கைந்நிலை

*  தூது இலக்கியத்திற்குரிய யாப்பு - கலிவெண்பா


*  தொல்காப்பியம் -  முழுமையாகக் கிடைத்த எழுத்து சொல்பொருள் நூல்.

*  தினையியல், களவியல், கற்பியல் பொருளியல் ஆகிய நான்கும் உரைப்பது -  அகப்பொருள்.

*  பூதத்தாழ்வார் பிறந்த இடம் - காஞ்சிபுரம்

*  நம்மாழ்வாரின் சீடராகக் கருதப்படுபவர் -  திருப்புளி ஆழ்வார்.

TNPSC GROUP 2 & 4 - தமிழ் வினா விடைகள் 253

TNPSC GROUP 2 & 4 - தமிழ் வினா விடைகள் 253
*  தொல்காப்பியம் அமைந்துள்ள "பா" வகை -  கலிப்பா


*  ஐந்திணை எழுபதின் ஆசிரியர் - மூவாதியார்

*  சிவபெருமானால் அம்மையே என்று அழைக்கப்பட்டவர் - காரைக்கால் அம்மையார்

*  தமிழின் தொடர் அமைப்பு எந்த அடிப்படையில் அமையும் - செயப்படுபொருள் - எழுவாய் - பயனிலை

*  யசோதர காவியத்தின் ஆசிரியர் - வெண்ணாவலுடையார்


*  உள்ளத்துணர்வுகளின் வெளிப்பாட்டை விளக்குவது - மெய்ப்பாட்டியல்

* "இலக்கியம் வாழ்வின் கண்ணாடி என்றும் காலத்தைக் காட்டும் கண்ணாடி என்றும்" எதனைக் கூறுவர் - சங்க இலக்கியம்.


*  99 வகை மலர்களின் வருணை அமைந்து வரும் பாடல் - மலைபடும்கடாம்

*  பதினெண் கீழ்க்கணக்கில் உள்ள அறநூல்களின் எண்ணிக்கை -  11

*  "முடி பொருள் தொடர்நிலைச் செய்யுள்" என்று அழைக்கப்படுவது - சீவக சிந்தாமணி

*  வேளாண் வேதம் என அழைக்கப்படும் நூல் - நாலடியார்

*  உத்திரவேதம் என அழைக்கப்படும் நூல் - திருக்குறள்

*  திருக்குறளில் தனமனிதனது வாழ்வின் மேன்மையைக் குறிக்கும் பகுதி - அறத்துப்பால்

*  காலந்தோறும் தமிழ் சங்க காலத் தமிழ், பல்லவர் காலத் தமிழ் என வழங்கப்படுகிறது.

*  மூவேந்தர்களின் சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்தோர் -  பாண்டியர்

*  தொல்காப்பியம் பொருளாதிகாரம் எதற்கு இலக்கணம் கூறுகிறது - அகத்திணை, புறத்திணை.


TNPSC GROUP 2 & 4 - தமிழ் வினா விடைகள் 254

TNPSC GROUP 2 & 4 - தமிழ் வினா விடைகள் 254

*  சுந்தரர் பிறந்த ஊர் - திருமுனைப்பாடி


*  சுந்தரரின் இயற்பெயர் - நம்பி ஆரூரர்

*  "வையம் தகளியாக, வார்கடலே நெய்யாக" என்று முதல் திருவந்தாதியைப் பாடியவர் - பொய்கையாழ்வார்.

*  தமிழ்மாறன் என்று அழைக்கப்படுபவர் - நம்மாழ்வார்

*  புறப்பொருளுக்கு இலக்கணம் உரைக்கும் நூல் - புறப்பொருள் வெண்பாமாலை

*  மூன்று சீர்களாய் அமைவது - நேரிசை ஆசிரியப்பா

*  ஈற்றயலடி முச்சீராய் வருவது - நேரிசை ஆசிரியப்பா

*  மூன்று சீர்களாய் அமைவது - நெடிலடி

*  சார்பெழுத்துக்களின் வகைகள் - ஐந்து

*  தமிழில் வேர்ச்சொல் ஆராய்ச்சியில் மிகவும் புகழ் பெற்றவர் - தேவநேயப் பாவாணர்

*  இடைச்சங்கத்தின் கால எல்லை - 3700 ஆண்டுகள்

*  இடைச்சங்கம் இருந்த இடம் - கபாடபுரம்

*  அறிவுடை நம்பியைப் பாடியவர் - பிசிராந்ததையார் பாண்டியன

*  தலைமுடி நரைக்காததற்கு விளக்கம் தந்தவர் - பிசிராந்தையார்

*  சோழ மன்னனின் உள்ளம் கவர்ந்த நண்பர் - பிசிராந்ததையார்

*  காரைக்கால் அம்மையார் அந்தாதித் தொடையில் பாடியுள்ள பாடல்கள் - அற்புதத் திருவந்தாதி, திருவிரட்டை மணி மாலை

*  காரைக்கால் அம்மையாரின் பாடல்கள் சேர்க்கப்பட்டுள்ள திருமுறை - பதினோராம் திருமுறை

*  மணிமேகலையின் அமுதசுரபியில் முதன் முதலில் சோறிட்டவர் - ஆதிரை

*  மணிமேகலையில் உள்ள காதைகள் - 30 காதைகள்

*  மணிமேகலைக்கு உதவிய பெளத்தமதத் துறவி - அறவண அடிகள்

*  மணிமேகலை நூல் அமைந்துள்ள பா - அகவற்பா

*  மணிமேகலை பெரிதும் வலியுறுத்துவது - பசிப்பிணி நீக்கம்

TNPSC GROUP 2 & 4 - தமிழ் வினா விடைகள் 255

TNPSC GROUP 2 & 4 - தமிழ் வினா விடைகள் 255
*  தென்னவன் பிரமராயன் என்ற விருது பெற்ற நாயன்மார் - மாணிக்கவாசகர்


*  திருத்தொண்டத் தொகையை எழுதியவர் - மாணிக்கவாசகர்

*  சமுதாய சீர்திருத்தங்களைக் கூறிய காப்பியம் (பரத்தை ஒழிப்பு, மது ஒழிப்பு, நிறை ஒழிப்பு, சாதி ஒழிப்பு) - மணிமேகலை

*  சீவகன் ஆட்சி எய்திய சிறப்புப் பற்றிக் கூறும் இலம்பகம் - நாமகள் இலம்பகம்

*  வளையாபதி எந்தச் சமயத்தைச் சார்ந்த நூல் - சமண சமயம்

*  தருமசேனர் என்று அழைக்கப்பட்டவர் - அப்பர்

*  "வடமேங்கடம் தென்குமரி ஆயிடை தமிழ் கூறு நல்லுலகம்" எனத் தமிழ்நாட்டின் எல்லையைக் குறிப்பிடுபவர் - பனம்பாரனார்

*  "கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே, வானொடு முன்தோன்றி மூத்தகுடி" எனும் தொடர் அமைந்துள்ள பாடல் - புறப்பொருள் வெண்பாமாலை

*  "இவள் என்று பிறந்தவள்" என்றறியாத இயல்பினலாம் எங்கள்தாய்" என்று தமிழின் தொன்மையைக் குறிப்பவர் - பாரதியார்.

*  "விண் இயங்கும் ஞாயிற்றைக் கை மறைப் பாரில்" இவ்வடி இடம்பெறும் நூல் - கார் நாற்பது.

*  திருமாலின் பாஞ்சசன்யம் என்னும் சங்கின் அவதாரமாகக் கருதப் பெறுபவர் - பொய்கையாழ்வார்

*  தமிழ்மொழியியல் ஆய்வுக்கு வித்திட்டவர் - தெ.பா.மீ

*  மொழி என்பது - கருத்துக்களின் பரிமாற்றம்

*  தமிழ்மொழி வழங்கிய பகுதியின் வட எல்லை, தென் எல்லைகளாக அமைந்தவை - வடவேங்கடம் முதல் தென் குமரி வரை

*  சங்கங்கள் கடல்கோள்களால் அழிந்தன.

*  சங்கங்கள் பாண்டியர்களால் புரக்கப் பெற்றன.

*  சங்கங்கள் தமிழ் வளர்த்தன.

*  களவியலுரை என்பது ஒர் உரைநூல்.

*  களவியலுரை என்பது ஒர் இலக்கண நூல்

*  களவியலுரை என்பது காலத்தால் பழமையான நூல்

*  பண்பட்ட திராவிட மொழிகளில் தொன்மையானது - தமிழ்

*  பத்துப்பாட்டு நூலில் மிகவும் பெரிய நூல் - மதுரைக் காஞ்சி

TNPSC GROUP 2 & 4 - தமிழ் வினா விடைகள் 256

TNPSC GROUP 2 & 4 - தமிழ் வினா விடைகள் 256

*  பொருநராற்றுப்படையைப் பாடியவர் - முடத்தாமக் கண்ணியார்.


*  மலைபடுகடாம் என்னும் இலக்கியம் - கூத்தாற்றுப்படை

*  முல்லைப்பாட்டைப் பாடியவர் - நப்பூதனார்.

*  தமிழ் நிலைபெற்ற மதுரை எனக்கூறும் நூல் - சிறுபாணாற்றுப்படை

*  உலா நூல்களுள் மிகப் பழமையைனது -  திருக்கைலாய ஞான உலா

*  தூது இலக்கியத்திற்குரிய யாப்பு - கலிவெண்பா

*  கலிங்கத்துப் பரணி பாட்டுடைத்தலைவன் - குலோத்துங்கன்

*  ஆண்பால் பிள்ளைத் தமிழின் இறுதி நான்கு பருவங்கள் - அம்புலி, சிற்றில், சிறுபறை, சிறுதேர்

*  திருக்கோவையார் என்னும் சிற்றிலக்கியத்தை இயற்றியவர் - மாணிக்கவாசகர்

*  கலம்பக இலக்கியம் பாடுவதில் வல்லவர் - இரட்டைப் புலவர்

*  தமிழ் மொழியில் தோன்றிய முதல் குறவஞ்சி இலக்கியம் - அழகர் குறவஞ்சி

*  கண்ணனே வந்து தன் கைத்தலம் பற்றக் கனவு கண்டதாகக் கூறும் பாடலைப் பாடியவர் - ஆண்டாள்

*  "நாமார்க்கும் குடியேல்லோம், நமனை அஞ்சோம்" என்று பாடியவர் - திருநாவுக்கரசர்

*  "பொய்கை ஆழ்வார்" பாடிய பக்திப் பாடல் தொகுதியின் பெயர் - முதல் திருவந்தாதி

*  "சான்றோனாக்குதல் தந்தைக்கு கடனே" பாடியவர் - பொன்முடியார்

*  திருமாலின் பல்வேறு அம்சமாகத் தோன்றிய ஆழ்வார்கள்

*  பாஞ்ச சன்யம் - பொய்கையாழ்வார்

*  கருடாம்சம்    - பெரியாழ்வார்

*  சுதர்சனம் - திருமழிசை

*  களங்கம் -  திருமங்கையாழ்வார்

TNPSC GROUP 2 & 4 - தமிழ் வினா விடைகள் 257

TNPSC GROUP 2 & 4 - தமிழ் வினா விடைகள் 257

*  காலமுறைப்படி வரிசைப்படுத்துதல்: பொய்கையாழ்வார், பூத்தாழ்வார், பேயாழ்வார்,
திருமழிசையாழ்வார்

*  நற்றினண, நல்ல குறுந்தொகை, ஐங்குறு நூறு, ஒத்தபதிற்றுபத்து

*  அம்புலி, சிற்றில் சிறுபறை, சிறுதேர்

*  காப்பு, செங்கீரை, தாலாட்டு, சப்பாணி

*  அரியணையைத் துறந்து வைணவத் தொண்டர் கோலத்தை ஏற்றவர் - குலசேகரர்

*  சுந்தர் பாடிய திருத்தொண்டர் தொகை - தொண்டர் தம் பெருமை கூறும் நூல்

*  பிள்ளைத் தமிழின் இலக்கியம் குறித்து விளக்கம் தரும் நிகண்டு - திவாகர நிகண்டு

*  குலோத்துங்க சோழனின் பிள்ளைத்தமிழ் பாடியவர் - ஒட்டக்கூத்தர்

*  பகழிக்கூத்தர் பாடிய பிள்ளைத்தமிழ் - திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ்.

*  திருத்தக்கதேவர் சார்ந்த சமயம் - சமண சமயம்

*  சீவகன் கதையைப் பெருங்காப்பியமாகப் பாடியவர் -  திருத்தக்கதேவர்

*  அறிவு அற்றம் காக்கும் கருவி - முப்பால்

*  செல்வம் சகடக் கால்போல் வரும் - நாலடியார்

*  சிறு மாலை கொல்லுனர் போல வரும் - ஐந்திணை எழுபது

2013ம் ஆண்டிற்கான அரசு விடுமுறை நாட்கள்: தமிழக அரசு அறிவிப்பு

2013ம் ஆண்டிற்கான அரசு விடுமுறை நாட்கள்: தமிழக அரசு அறிவிப்பு
2013ம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்கள் குறித்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசின் சார்பில் அதன் தலைமை
செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது,
தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டின் கீழுள்ள அனைத்து அலுவலகங்களும் பின்வரும் நாட்களில் மூடப்பட வேண்டுமென அறிவுறுத்தப்படுகிறது.
பொது விடுமுறை நாட்களாக குறிப்பிடப்பட்ட ஞாயிற்றுக்கிழமைகளுடன் பின்வரும் நாட்களும் 2013ம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்களாக கொள்ளப்படும் என தமிழக அரசு இதனால் அறிவிக்கிறது.
ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பு- 1.1.2013 (செவ்வாய்க் கிழமை),
பொங்கல் திருநாள்- 14.1.2013 (திங்கட்கிழமை),
திருவள்ளுவர் திருநாள்- 15.1.2013 (செவ்வாய்க்கிழமை),
உழவர் திருநாள்- 16.1.2013 (புதன்கிழமை),
மீலாது நபி- 25.1.2013 (வெள்ளிக்கிழமை),
குடியரசு தினம்- 26.1.2013 (சனிக்கிழமை),
தூய வெள்ளி- 29.3.2013 (வெள்ளிக்கிழமை),
ஆண்டு வங்கிக் கணக்கு முடிவு (வங்கிகளுக்கு மட்டும்)- 1.4.2013 (திங்கட்கிழமை),
தெலுங்கு புத்தாண்டு- 11.4.2013 (வியாழக்கிழமை),
தமிழ் புத்தாண்டு பிறப்பு மற்றும் அம்பேத்கர் பிறந்த நாள்- 14.4.2013 (புதன்கிழமை),
மகாவீர் ஜெயந்தி- 24.4.2013 (புதன்கிழமை),
ரம்ஜான்- 9.8.2013 (வெள்ளிக்கிழமை),
சுதந்திர தினம்- 15.8.2013 (வியாழக்கிழமை),
கிருஷ்ண ஜெயந்தி- 28.8.2013 (புதன்கிழமை),
விநாயகர் சதுர்த்தி- 9.9.2013 (திங்கட்கிழமை),
அரையாண்டு வங்கிக் கணக்கு முடிவு (வங்கிகளுக்கு மட்டும்)- 30.9.2013 (திங்கட்கிழமை),
மகாத்மா காந்தி பிறந்த நாள்- 2.10.2013 (புதன்கிழமை),
ஆயுத பூஜை- 13.10.2013 (ஞாயிற்றுக்கிழமை),
விஜயதசமி- 14.10.2013 (திங்கட்கிழமை),
பக்ரீத்- 16.10.2013 (புதன்கிழமை),
தீபாவளி- 2.11.2013 (சனிக்கிழமை),
மொஹரம்- 14.11.2013 (வியாழக்கிழமை),
கிறிஸ்துமஸ்- 25.12.2013 (புதன்கிழமை) ஆகிய 24 நாட்கள் பொது விடுமுறை நாட்களாக அரசு அறிவித்துள்ளது.
2013ம் ஆண்டின் அனைத்து சனிக்கிழமைகளும் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளும் மேலே அறிவிக்கப்பட்டுள்ள பொது விடுமுறை நாட்கள், மாநில அரசின் அனைத்து பொதுத்துறை நிறுவனங்கள், கழகங்கள், வாரியங்கள் முதலியவற்றுக்கு பொருந்தும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 250

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 250

1. ஒரு குதிரைத்திறன் என்பது


அ. 946 வாட்
ஆ. 846 வாட்
இ. 746 வாட்
ஈ. 646 வாட்

2. வௌவால் ஏற்படுத்துவது

அ. குற்றொலி
ஆ. மீயொலி
இ. செவி உணர் ஒலி
ஈ. அனைத்தும் தவறு
3. மனிதன் மற்றும் சில விலங்குகளின் ஒலி உணரும் திறனை (ஹெர்ட்ஸ்) பொருத்துக:

I. மனிதன் - 1. 1000 - 1,00,000
II. யானை - 2. 100 - 32,000
III. பூனை - 3. 20 - 20,000
IV. கொறி விலங்குகள் - 4. 16 - 12,000

அ. I-3 II-1 III-2 IV-4
ஆ. I-3 II-4 III-1 IV-2
இ. I-3 II-2 III-1 IV-4
ஈ. I-3 II-4 III-2 IV-1
4. குவி ஆடியில் தோன்றும் பிம்பங்கள் அனைத்தும்

அ. மாயபிம்பம்
ஆ. மெய்பிம்பம்
இ. பொய்பிம்பம்
ஈ. மாய மற்றும் மெய்பிம்பங்கள்
5. மழைத்துளிகள் கோள வடிவத்தைப் பெறக் காரணம்

அ. பரப்பு இழுவிசை
ஆ. ஈர்ப்பு விசை
இ. மைய நோக்கு விசை
ஈ. மைய விலக்கு விசை
6. முதன்மை நிறங்கள்

அ. சிவப்பு, பச்சை, நீலம்
ஆ. பச்சை, சிவப்பு, கருப்பு
இ. சிவப்பு, பச்சை, வெள்ளை
ஈ. கருப்பு, மஞ்சள், நீலம்
7. அகச்சிவப்பு கதிர்களின் இயற்கை மூலம்

அ. காற்று
ஆ. ஆக்சிசன்
இ. நீர்
ஈ. சூரியன்
8. ஒரு கிலோகிராம் நிறையுள்ள ஒரு பொருளின் மீது செயல்படும் புவி ஈர்ப்பு விசை

அ. 9.9 N
ஆ. 9.10 N
இ. 9.8 N
ஈ. 9.11 N
9. ஒரு சிறிய கோப்பையில் உள்ள கொதி நீரின் வெப்ப நிலையும் ஒரு பெரிய பாத்திரத்தில் உள்ள கொதி நீரின் வெப்ப நிலையும்

அ. சமமாக இருக்கும்
ஆ. தண்ணீரின் அளவை பொறுத்து மாறுபடும்
இ. பாத்திரத்தின் அளவை சார்ந்து வேறுபடும்
ஈ. மேற்கூறிய எதுவும் சரியில்லை
10. காற்றாலைகள் அமைக்க தேவையான காற்றின் சராசரி வேகம்

அ. 20 கி.மீ.
ஆ. 18 கி.மீ.
இ. 25 கி.மீ.
ஈ. 30 கி.மீ.

11. தகவல்களை எடுத்துச் செல்வதில் மிகவும் சக்திவாய்ந்தது

அ. கேபிள்
ஆ. ரேடியோ அலைகள்
இ. மைக்ரோ அலைகள்
ஈ. ஆப்டிகல் பைபர்
12. நீராவி இன்ஜினை கண்டு பிடித்தவர் யார்?

அ. ஸ்டீபன்ஸன்
ஆ. ஜேம்ஸ்வாட்
இ. மெக்ஆடம்
ஈ. ராவ்லண்ட் ஹில்ஸ்
13. தீர்ந்து விடாத ஆற்றல் மூலம்

அ. பெட்ரோலியம்
ஆ. நிலக்கரி
இ. இயற்கை வாயு
ஈ. சூரியன்
14. ஒரு துப்பாக்கியிலிருந்து வெளிவரும் குண்டின் இயக்கம்

அ. சுழற்சி இயக்கம்
ஆ. வேக இயக்கம்
இ. நேர்கோட்டு இயக்கம்
ஈ. அலை இயக்கம்
15. ஒரே உயரத்தில் இருந்து தடையின்றி தானே விழும் வெவ்வேறு எடையுள்ள பொருட்கள் எப்போது புவியில் விழும்

அ. எடை அதிகமான பொருள் முதலில் விழும்
ஆ. அவை ஒரே நேரத்தில் விழும்
இ. இரண்டும் சரி
ஈ. இரண்டும் தவறு

விடை: 1. இ 2. ஆ 3. ஈ 4. அ 5. அ 6. அ 7. ஈ 8. இ 9. அ 10. ஆ 11. ஈ 12. ஆ 13. ஈ 14. இ 15. ஆ 

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 251

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 251

1. ரயில் நிலையத்தை நோக்கி ரயில் வரும்போது ஒலியின் சுருதி அதிகமாகவும் நம்மைவிட்டு விலகிச்
செல்லும்போது குறைவாக கேட்பதை டாப்ளர் விளைவு மூலம் 1842ம் ஆண்டு விளக்கியவர்

அ. மார்ஷல் டாப்ளர்
ஆ. ஸ்டீபன் டாப்ளர்
இ. ஐசக் டாப்ளர்
ஈ. கிறிஸ்டியன் டாப்ளர்
2. ஒலிப்பதிவு செய்யும் ஒலி நாடாவில் உள்ளது
அ. இரும்பு ஆக்ஸைடு
ஆ. குரோமியம் டை ஆக்ஸைடு
இ. இரண்டும் இருக்கும்
ஈ. மேற்சொன்ன இரண்டில் ஒன்று
3. பாராசூட் திறக்காத நிலையில் வானத்தில் குதிப்பவரின் முற்று திசை வேகம் ஏறக்குறைய

அ. 150 கி.மீ
ஆ. 200 கி.மீ
இ. 250 கி.மீ
ஈ. 300 கி.மீ
4. கோள்களின் இயக்கம் பற்றிய கெப்ளரின் முதல் விதியின் மற்றொரு பெயர்

அ. காலங்களின் விதி
ஆ. பரப்புகளின் விதி
இ. சுற்றுப்பாதைகளின் விதி
ஈ. தொலைவுகளின் விதி
5. கருமை நிற பொருட்கள் எல்லா நிறங்களையும்

அ. உட்கவரும்
ஆ. எதிரொளிக்கும்
இ. இரண்டும் சரி
ஈ. இரண்டும் தவறு

6. பிரஷர்குக்கரில் (அழுத்த சமைப்பான்) நீரின் கொதி நிலை

அ. 100o C
ஆ. 110o C
இ. 120o C
ஈ. 130o C
7. ஒரு மின் விளக்கின் ஆயுள்

அ. 1,000 மணிகள்
ஆ. 1,500 மணிகள்
இ. 2,000 மணிகள்
ஈ. 2,500 மணிகள்
8. மிதிவண்டி மின் இயக்கி செயல்படும் தத்துவம்

அ. வலக்கை பெருவிரல் விதி
ஆ. மின்காந்த தூண்டல்
இ. காந்த தூண்டல்
ஈ. இடக்கை விதி
9. ஒரு பொருள் திட நிலையில் இருந்து நேரடியாக வாயு நிலைக்கு மாறும் நிகழ்வு
அ. ஆவியாதல்
ஆ. உருகுதல்
இ. உறைதல்
ஈ. பதங்கமாதல்
10. ஆவியாதல் திரவத்தின் எப்பகுதியில் நிகழும்
அ. திரவத்தின் நடுப்பகுதியில்
ஆ. திரவத்தின் அடிப்பகுதியில்
இ. திரவத்தின் மேற்பரப்பில்
ஈ. திரவத்தின் மேற்பரப்பு மற்றும் அடிப்பகுதியில்
11. ஈரம் மிகுந்த காற்றில் உலர்ந்த காற்றை விட ஒலி
அ. வேகமாக பரவும்
ஆ. மெதுவாக பரவும்
இ. மாற்றம் இல்லை
ஈ. அனைத்தும் தவறு

விடை: 1. ஈ 2. ஈ 3. ஆ 4. இ 5. அ 6. இ 7. அ 8. ஆ 9. ஈ 10. இ 11. அ

புதுச்சேரியில் கட்டாய தமிழ் பயிலும் சட்டம் விலக்கு

புதுச்சேரியில் கட்டாய தமிழ் பயிலும் சட்டம் விலக்கு

கட்டாயமாக தமிழ் பயிலும் சட்டத்திலிருந்து விலக்கு அளித்து, புதுச்சேரி, காரைக்கால் பள்ளிகளில், இந்தி மற்றும் பிரெஞ்ச் மொழி கற்பிக்கவும், தேர்வு நடத்தவும், தமிழக அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது.


மொழிப் பாடம்: பள்ளிகளில் கட்டாயமாக தமிழ் பயிலும் சட்டத்தை, 2006ல், தமிழக அரசு கொண்டு வந்தது. அதன்படி, தமிழ்நாடு இடைநிலை கல்வி வாரியத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், தமிழ் மொழியை மட்டுமே கட்டாயமாகப் பயில வேண்டும் என்ற சூழ்நிலை உருவானது.

பாடத் திட்டத்தைப் பொறுத்தவரை, தமிழக அரசின் பாடத் திட்டத்தையே புதுச்சேரி அரசு சார்ந்துள்ளது. அதன்படி, புதுச்சேரி மாநிலப் பள்ளிகளில், 2006ல், முதல் வகுப்பில் சேர்ந்த மாணவர்கள், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் போது, மொழிப் பாடமாக, தமிழ் மொழியில் தேர்வு எழுத வேண்டிய நிலை உள்ளது.

இந்திய அரசு, பிரெஞ்ச் அரசுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி, புதுச்சேரி மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், பிரெஞ்ச் மொழி கற்பதற்கு ஆவன செய்ய வேண்டும். மேலும், புதுச்சேரி மாநிலத்தில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகள் பணிபுரிவதால், பள்ளிகளில் இந்தி மொழி கற்பிப்பதும் அவசியமாகிறது.

இத்தகைய காரணங்களால், கட்டாயத் தமிழ் பயிலும் சட்டத்திலிருந்து, புதுச்சேரிக்கு விலக்கு அளிக்குமாறு, தமிழக அரசுக்கு, புதுச்சேரி அரசு வேண்டுகோள் வைத்தது. அதன்படி, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பள்ளிகளில், இந்தி மற்றும் பிரெஞ்ச் மொழி கற்பிக்கவும், இம்மொழிப் பாடங்களில் தேர்வு நடத்தவும் உரிய நடவடிக்கை எடுப்பதாக, தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

புதுச்சேரி ஜிப்மர் ஆடிட்டோரியத்தில் நடந்த, குழந்தைகள் தின விழாவில், முதல்வர் ரங்கசாமி பேசியதாவது: கட்டாயத் தமிழ் பயிலும் சட்டத்தால், புதுச்சேரி, காரைக்கால் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், தமிழ் மொழி தேர்வு மட்டுமே எழுத வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

நன்றி தெரிவிப்பு: புதுச்சேரி அரசின் கோரிக்கையை ஏற்று, பள்ளிகளில் இந்தி மற்றும் பிரெஞ்ச் மொழி கற்பிக்கவும், தேர்வு நடத்தவும் தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. அதற்காக, தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 247

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 247

1. சார்க் என்பதன் விரிவாககம் - தெற்காசிய நாடுகளின் மண்டலக் கூட்டமைப்பு

2. கோட்டைகள் அதிகம் உள்ள நாடு - செக்கோஸ்லோவேகியா
3. கன்னிமாரா நூலகம் முதன் முதலில் துவக்கப்பட்ட இடம் - புனித ஜார்ஜ் கோட்டை
4. இந்தியாவின் முதல் நவீன நூலகம் - கன்னிமாரா நூலகம்
5. சிப்பாய் கலகம் ஏற்பட்ட நாள் - 10.07.1806
6. வேலூர் கோட்டையை கட்டிய சிற்பி - பத்ரிகாசி இமாம்
7. இத்தாலியின் இராணுவக் கோட்டை வடிவமைப்பில் அமைந்துள்ள கோட்டை - வேலூர் கோட்டை
8. வேலூர் கோட்டையை கட்டியவர்- சின்ன பொம்மன் நாயக்கன்
9. இந்தியாவின் மிக உயர்ந்த கொடிக்கம்பம் அமைந்துள்ள இடம் - புனித ஜார்ஜ் கோட்டை
10. புனித ஜார்ஜ் கோட்டையை கட்ட ஆங்கிலேயருக்கு இடம் அளித்தவர் - சென்னியப்ப நாயக்கர்

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 248

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 248

1. புனித ஜார்ஜ் கோட்டையை கட்டியவர் - சர் பிரான்சிஸ் டே

2. புனித ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்ட ஆண்டு - 1639
3. வேலூர் புரட்சியின் 200வது ஆண்டு  தினம் கொண்டாடப்பட்ட ஆண்டு - 2006
4. தரங்கம்பாடி கோட்டையைக் கட்டியவர்கள்-டென்மார்க் நாட்டவர்
5. அச்சு இயந்திரத்தை தமிழ்நாட்டில் அறிமுகம் செய்தவர் - சீகன்பால்கு
6. தரங்கம்பாடி கோட்டை கட்டப்பட்ட ஆண்டு - 1620
7. புனித ஜார்ஜ் கோட்டை அமைந்துள்ள இடம் - சென்னை
8. சிங்கபுர நாடு என்று அழைக்கப்பட்ட பகுதி - செஞ்ஜி
9. போக்குவரத்து விதிகளில் சிவப்பு முக்கோணம் குறிப்பிடுவது - செல்லாதே
10. போக்குவரத்து விதிகளில் நீலச் செவ்வகம் குறிப்பிடுவது - தகவல் சின்னங்கள்

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 249

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 249

1. கிழக்கின் ட்ராய் என்று அழைக்கப்பட்ட கோட்டை - செஞ்சிக் கோட்டை

2. போலியோ சொட்டு மருந்து குழந்தைகளுக்கு எத்தனை வயது வரை தர வேண்டும் - 5
3. செஞ்சிக் கோட்டை அமைந்துள் மலை - கிருஷ்ணகிரி
4. தமிழ்நாட்டின் மொத்த மாவட்டங்கள் - 32
5. தமிழ்நாட்டில் குறிஞ்சி மலர் எங்கு மலர்கிறது - நீலகிரி மலை
6. தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்கள் - கடலூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம்
7. மேகாலயாவின் தலைநகரம் - ஷில்லாங்
8. பாம்பன் பாலம் அமைந்துள்ள மாவட்டம் - இராமநாதபுரம்
9. இந்தியாவின் மிகப்பெரிய அணைக்கட்டு - பக்ரா நங்கல்
10. கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ள மாவட்டம் - திருநெல்வேலி