Breaking News

நில நடுக்கத்தால் தங்கமாகும் தண்ணீர் - ஆய்வில் தகவல்

ADSENSE HERE!

நிலநடுக்கத்தால் பூமிக்கு அடியில் எண்ணற்ற மாற்றங்கள் ஏற்படும் என்பதை
கேள்விப்பட்டிருப்போம். ஆனால் நியூசிலாந்து நாட்டில் நிலத்தடியில் இருக்கும் நீர் தங்கமாக மாறுவதாக ஆய்வொன்றிலிருந்து தெரியவந்துள்ளது.
ஆஸ்திரேலியாவின், குயின்ஸ்லாந்து பல்கலைகழக புவியியல் துறையின் சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பூமியில் நிலநடுக்கத்தால் ஏற்படும் மாற்றங்கள் குறித்து நடைபெற்ற இந்த ஆய்வில் ஒவ்வொரு முறை நிலநடுக்கம் ஏற்படும் போதும் நீர் மூலக்கூறுகள் தங்கமாக மாற்றமடைவது இந்த ஆய்வில் கண்டறியப்பட்டது.
மேலும் இந்த ஆய்வில்,"நிலநடுக்கத்தால், பூமியின் அடிப்பகுதியில் உள்ள நீர், அதிக அழுத்தத்திற்கு உட்படுகிறது.
இதனால் நீர் மூலக்கூறுகள் இரசாயன மாற்றத்திற்கு உள்ளாகின்றன. இந்த மாற்றம் பூமியின் மத்திய பகுதியில் நிலவும் அதிக வெப்பத்தின் காரணமாக மேலும் சில மூலகங்களுடன் இரசாயனமாற்றத்திற்கு உள்ளாகின்றன. இதனால் பல மாற்றங்களுக்கு பின் நீரானது தங்கமாக மாறுகிறது. என்று கூறியுள்ளனர்.
சாதாரணமாக இந்நிகழ்வு சில ஆயிரம் ஆண்டுகளுக்கு பின் நடைபெறுகிறது.ஆனால் நியூசிலாந்தில் நிலவும் சாதகமான தட்ப வெட்ப நிலையின் காரணமாக வெகு விரைவிலேயே இந்த மாற்றம் நிகழ்கிறது. சில நூறு ஆண்டுகளுக்கு பின் நியூசிலாந்தில் ஏராளமான தங்க சுரங்கங்கள் உருவாவதற்கான வாய்ப்புகள் உள்ளன"என்றும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ADSENSE HERE!

No comments:

Post a Comment